Share this book with your friends

T . PEN PULIGAL , LTTE / த . பெண் புலிகள், LTTE

Author Name: TAMIZHDESAN IMAYAKAPPIYAN | Format: Paperback | Genre : History & Politics | Other Details

தமிழ்க்கவி, இசைப்பிரியா மற்றும் ஆநதி(வெற்றிச்செல்வி)

பெண் போராளிகள் பற்றி தமிழீழ தேசிய தலைவர் சொன்னது என்ன?
பெண் விடுதலையே ஒரு இனத்தின் விடுதலைக்கான முதல் படி என்றார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்.அவரின் அந்த சிந்தனையில் தோன்றியது தான் விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி எனும் பெண்கள் இராணுவப் பிரிவு.உலகில் பெண்களுக்கு சமவுரிமை கொடுத்து, அவர்களையும் இனவிடுதலைக்காக ஆயுதம் ஏந்தி களத்திற்கு கொண்டுவந்து பாரதியின் கனவை நனவாக்கியவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்.அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட காலத்தினை மாற்றி, அடுப்பு ஊதும் பெண்களாலும், களத்துடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபித்தவர் அவர் தான்.இந்நிலையில் ஒரு போராட்ட இயக்கம் தன் போராட்டத்தில் சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் எடுத்துக் கொண்டது விடுதலைப் புலிகள் தான்.அதன்படியே விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி உருவாக்கப்பட்டு, இன்றுடன் 31 ஆண்டுகளைக் கடந்து நிற்கின்றது.1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது.அன்று தொடக்கம் பல்லாயிரம் பெண்கள் தம்மை போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீர மரணத்தையும் அடைந்துள்ளனர்.மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலின் பின்னர் பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்கியது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.

Read More...
Paperback
Paperback 699

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

TAMIZHDESAN IMAYAKAPPIYAN

உயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்
83 - இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர் உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி  இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்

எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன் பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள் கடந்த  ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் - புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்

மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன் உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது

 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன் எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது

Read More...

Achievements

+15 more
View All