You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal1977-ல் அன்று தமிழ் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான இந்துமதி அவர்களால் எழுதப்பட்டு, பெரும் வரவேற்பு பெற்ற, 'தரையில் இறங்கும் விமானங்கள்' என்ற குறுநாவலில் சரியாக இனம் காணப்பட்ட ஜனநாயகத் தன்மையும், முற்போக்கான ஆக்கங்களும் இறுதியில் ஆசிரியராலேயே பின்னுக்கு தள்ளப்பட்டன என்ற விமர்சனத்தின் அடிப்படையில், இந்துமதியால் துவக்கப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்ற விழுமியங்களை அவற்றின் தர்க்கரீதியான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும் பணியை இக்குறுநாவல் நிறைவேற்ற முயற்சிக்கிறது. ஒரு நாவலுக்கு எதிராக இன்னொரு நாவலை நிறுத்துவது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதுமையாக கருதப்படலாம்.
கலை
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் ரெங்கபாளையம் என்ற குக்கிராமத்தில் பிறந்த இந்நாவலின் ஆசிரியர் கலை என்ற புனைபெயர் கொண்டவர். எழுத்தாளர் ஆகும் நோக்கத்துடன் தனது ரயில்வே பணியிலிருந்து விருப்ப ஓய்வில் 2009-ல் தன்னை விடுவித்துக் கொண்டவர்.
பரீக் ஷா என்ற பரீட்சார்த்த நாடகக் குழுவில் சென்னையில் நீண்ட காலமாக தன்னை இணைத்துக் கொண்டவர். முற்போக்கு சிந்தனையுடன் கூடிய இவர் பெண் விடுதலைக்கான போராளியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். பல நாடகங்களை இவர் பரீக் ஷா நாடகக் குழுவிற்காக எழுதியுள்ளார்.
அரசியலும், இலக்கியமும் இவரது இரண்டு கண்கள். இந்த இரு தளங்களிலும் நீண்ட நெடியகாலம் பயிற்சியும், ஈடுபாடும், அனுபவமும் பெற்றவர்.
இந்நாவலைத் தவிர தமிழகத்தின் முன்னோடி வார இதழ் குமுதத்தின் பதிப்பகத்தால் இவரது இரண்டு புத்தகங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு விற்பனையில் உள்ளன. 'உலகப் புரட்சியாளன் சேகுவேராவின் வாழ்க்கை வரலாற்றை' சிக்த் சென்சஸ் என்ற பதிப்பகத்திற்காக எழுதி முடித்துள்ளார். 'Panchathantra stories retold' மற்றும் 'If I were born again' ஆகிய இரண்டு ஆங்கில புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். திரைப்பட கதை வசனம் ஒன்றையும் எழுதி முடித்துள்ளார்.
தமிழக தொலைக்காட்சிகளில் நடத்தப்பட்டு வரும் அரசியல் விவாதங்களில் அரசியல் விமர்சகராக கலந்து கொண்டு தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.
The items in your Cart will be deleted, click ok to proceed.