You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஅனைத்து கண்டங்களிலும் வாழும் ஈழத் தமிழர்களின் கதை, கட்டுரைகளின் தொகுப்பு.
காலம் எதனையும், எவரையும் மாற்றுகின்றது. கலாபனும் மாறியிருந்தான் என்பதை அவன் போனதடவை வந்திருந்தபோது நான் கண்டிருந்தேன். வீட்டு நிலைமை குறித்த அவனது கவனம் அதிகமும் என்னைக் காண திருமலை வந்திருந்த அவனது பேச்சில் இழையோடிக்கொண்டிருந்தது. பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள், தான் கூடவிருந்தால்தான் கல்விச் சிரத்தையும், ஒழுக்க மேம்பாடும் ஏற்படுமென்று அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு அதிசயமாகவிருந்தது. ஆனாலும் ஆச்சரியப்படவில்லை. காலம் எவரையும் மாற்றுகின்றதுதான்.
‘கொழும்பு செல்கிறேன், கப்பல் வேலையெடுப்பதொன்றும் முன்புபோல் சுலபமானதாக இல்லை, கடலிலே மிகப் பெரும் நவீன கப்பல்களின் வருகை, ஓடிக்கொண்டிருந்த ஆயிரக் கணக்கான சிறிய சிறிய பழைய கப்பல்களை இரும்பு விலைக்கு விற்கும்படியாக ஆக்கிவிட்டது, கன காலமில்லை, கொழும்பில் ஒரு மாதம்வரை தங்கி முயற்சித்துப் பார்ப்பேன், முடியாவிட்டால் பம்பாய் போய்விடுவேன், அங்கேயும் என்ஜினியர் வேலைதான் வேண்டுமென்று காத்திருக்க மாட்டேன், என்ஜின் றூம் வேலை எதுவானாலும் சேர்ந்துவிடுவதே எனது எண்ணம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றவன், ஒரு மாதத்திலேயே பம்பாய் சென்றுவிட்டதாக, அவன் எழுதிய கடிதத்தின்மூலம் தெரியவந்தது.
முன்பெல்லாம் தசைச் சுகத்தின் அதீத விழைச்சல்கள்பற்றிய வெறிகொண்ட எழுத்துக்கள் அதிகமும் அவனது கடிதங்களில் காணக்கிடக்கும். இந்தமுறை அவன் மாதுங்காவிலுள்ள அஷ்டலட்சுமி கோவில்பற்றியும், புகழ்பெற்ற செம்பூர் முருகன் கோவில்பற்றியும் எழுதியிருந்தான்.
காப்பியா வாசிப்பகம்
85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.
தமிழக மக்களுக்கு ஈழப் போர் குறித்த வாழ்வையும் பேரினவாத அரசால் நாளாந்தம் மக்கள் படும் பேரவலத்தையும் ஒரு நூறு கவிதைகளாகவும் கதைகளாகவும் சொல்லியிருக்கிறேன். புலம்பெயர் வாழ்வில் தமிழகப் பார்வையை உரை நடையாகவும், காதல் கவிதைகளாகவும், நாட்டுப்புறவியல் களச் சேகரிப்புகளாகவும், பத்திகளாகவும், இலக்கண இலக்கிய அகராதிக் காப்பியமாகவும், நாடகக்கலையாகவும், நுண்கலைப் பிரதிகளாகவும், நாடோடிப் பயணங்களாகவும், கலா சாலை போதகனாகவும், முற்போக்கில்லா கற்போக்கு விருந்தாளனாகவும், தொகுப்பதிகாரமாகவும் பதிவு செய்திருக்கிறேன். மேலும் ஆங்கிலத்தில் மூத்தகுடி கலாச்சாரப் பயணங்கள் மற்றும் கல்விப் புலக்கலைப் பேரதிகார நுட்பவியல் குறித்தும் மனைவி தமிழ் இனியா சொற்களை விதைத்து வருகிறார். புகார்க் காண்டத்திலிருந்து மதுரைக் காண்டம் வந்துள்ள கொடை மகன் இமயக்காப்பியன்(6) படைப்பாக்கப் பணியில் முந்நீர் போல் எமக்கு பேருதவியாக இருக்கிறான். துயரங்களின் சாட்சிகள் மரணிப்பதில்லை என்கிற காத்திரச் சொல்லின் சாட்சிகளாய் நாங்கள். கீழடி / உலகின் / மூத்த காலடி
எனக்கான உதவிகளை செய்யும் குழந்தைகள் சக்தி என்கிற விடுதலைவெண்பா, சூரியவாசன் என்கிற இலக்கியப்புரட்சியாளன், ரித்திஷா என்கிற நிழலினி, விதுஷி, பார்பி என்கிற மோனலிக்கும், பாரா முகமாகவே போய்விட்ட ஜேர்மனியில் வாழும் குழந்தைகளான பூர்த்திகா என்கிற இதழினி, அரிகரசுதன் என்கிற எளிஞன் ஆகியோருக்கும் நன்றி சொல்ல தேவையில்லை. எக்காலத்திலும் நன்றிக்குரியவர்களாக இருக்கும் என் சின்னத்தாய் செல்வி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தாருக்கும் மற்றும் எனது அக்கா பத்மாவதி, தீபாவிற்கும் நன்றிகள் பல.
The items in your Cart will be deleted, click ok to proceed.