Share this book with your friends

Thillai Perunkoyil Varalaru / தில்லைப் பெருங்கோயில் வரலாறு

Author Name: Ka. Vellaivarananaar | Format: Paperback | Genre : Arts, Photography & Design | Other Details

‘தில்லைப் பெருங்கோயில் வரலாறு' மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல். காரணம், அது தலபுராணச்செய்திகளுடன் வரலாற்று உண்மைகளையும் மற்றும் இலக்கியச் செய்திகளையும் தெரிவிப்பதே.

இதுபோன்ற நூல் ஒன்றினை, மலிவான விலையில் தயாரித்து, அதனைத் தமிழ் மக்கள் அனைவரும் படித்துப்பயன் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவர், தில்லைத் தமிழ் மன்றத் தலைவரும், தில்லைப்பெருங்கோயில் திருப்பணிக் குழுவின் செயலாளராக விளங்கிய திருப்பணிச் செல்வர் திரு ஜி. வாகீசம்பிள்ளை அவர்கள். கோயிலின் குடமுழுக்கை 11--2--87ல் பலரும் போற்ற நிகழ்த்திய அவர்கள், எண்ணிய எண்ணியாங்கு எய்தி குடமுழுக்கு விழாவின்போது. இந்நூலை வெளியிட்டு மகிழ்ந்தார்கள்.

இந்நூல் எழுதும் பொறுப்பை தமிழ் மூதறிஞர், பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணனார் அவர்களிடம் மன்றத் தலைவர் அவர்கள் ஒப்படைத்தார்கள், என்றும் போற்றத்தக்க வகையில் எவ்வித கைம்மாறும். கருதாது, தமிழுக்கும், சைவத்துக்கும் அளப்பரிய தொண்டுகள் செய்த பேராசிரியர் அவர்கள் தாம் ஏற்ற பொறுப்பை தம் உடல்நிலையைக் கூடக்கருதாது, மிகச் செம்மையாகச் செய்து முடித்தார்கள்.

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

க. வெள்ளைவாரணனார்

1979 முதல் 1982 ஆம் ஆண்டு வரை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றினார். பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் மாணாக்கரின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தார். இவர் தமிழ் இலக்கியம், இலக்கணம், திருமுறைகள், சைவசித்தாந்தம் ஆகியவற்றைக் கற்றுத் துறைபோய நற்றமிழ் அறிஞரகத் திகழ்ந்தார்.

Read More...

Achievements

+15 more
View All