Share this book with your friends

THO. MU. SI. EZHUTHTHULAGAM / தொ.மு.சி எழுத்துலகம் தாய் நாவல், அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்

Author Name: Kappiya Vaasipagam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

1. தாய் நாவல் 2. அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்  3. 6 சிறுகதைகளும் அடங்கிய நூல்.

கதைச் சுருக்கம்.
பனிக்காலம் கழிந்து இளவேனிற் காலம் மணம் பரப்பத் தொடங்கிய தருணத்தில், இரவு பகல் சமமாகும் நாள் நெருங்கும் முன் நீர் பிறந்தீர். பழைய உலகம் மறைந்து சூறாவளிகளை வென்று புறங்கண்டு புத்துலகம் பூத்தது. இரக்கமில்லாக் கொடுமை பல்கிப் பெருகிய காலம் இக்காலம், இக்காலத்தின் குறியீடாக, அடையாளமாக, தற்செயலாகப் பிறந்துள்ளீர். பழைய உலகையும் புதிய உலகையும் தழுவி நிற்கும் வில்வளைவு போன்றவர் நீர். அந்த வளைவைப் பாராட்டுகிறேன். பயணம் செய்யும் நெடுவழியில் அவ்வளைவு ஆளுமை செலுத்துகிறது. நமக்குப் பின் வழிவழித் திரண்டு வரும் மக்கள் பல்லாண்டுகள் அவ்வளைவைப் பார்த்துவிட்டுத்தான் கடந்து நடக்கவேண்டி இருக்கும்.

கார்க்கிக்கு ரோமெய்ன் ரோலண்டு வரைந்த கடிதம்
பெல்கேயா நீலவ்னா.....

படிக்காதவள்; உலகம் அறியாதவள். தொழிலாளியின் மனைவி. குடிப்பழக்கத்துக்கு ஆட்பட்ட கணவனால் நிறைய அடி உதைபட்டு அலைக்கழிக்கப்பட்டவள். இவளே, பிற்காலத்தில் புரட்சிப் புயலான ‘தாய்’ ஆகிறாள். மக்சீம் கார்க்கியின் ஒப்புயர்வற்ற அரிய படைப்பு.

கணவனை இழந்த தாய் குடித்துவிட்டு வீடு திரும்பிய தன் மகன். “பாவெல் விலாசவ்"வை ஏக்கத்துடன் பார்த்து அரவணைத்துக் கொள்கிறாள். மகன் மாறுகிறான்.

Read More...
Paperback
Paperback 999

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காப்பியா வாசிப்பகம்

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All