Share this book with your friends

TIGER'S TALKIES / பிரபாகரனின் திரைத் தாகம் (தி)தரையரங்கத்தில் புலி

Author Name: Tamizhdesan Imayakappiyan | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

 LTTE களஞ்சியதின் 3ஆம் பாகத்தை திரைக்களமாக வடிவமைத்திருக்கிறன்.

100க்கும் மேற்பட்ட கலை கட்டுரைகள் 500 பக்கங்கள், (6"X9" BOOK SIZE) தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கலை உணர்வு நிறைந்துள்ளமையால் கவிதைகளை நிறைய வாசிப்பார். அவரிடம் தனியான நூல்நிலையமே உள்ளது. இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய நூல்கள், தமிழக திராவிட இயக்க வளர்ச்சி பற்றிய நூல்கள், இலங்கையில் கோவை மகேசனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சுதந்திரன் வாரப்பத்திரிக்கை என்பவற்றை ஒழுங்காக சிறு வயதிலிருந்து வாசிப்பது வழக்கம். இந்த ஏடுகள் தமிழ் தேசிய உணர்ச்சியை தமக்குள்ளே ஏற்படுத்தின என அவர் ஒருமுறை குறிப்பிட்டார்.வாசிக்க வேண்டும் - பின்னர் யோசிக்க வேண்டும் என்று அடிக்கடி குறிப்பிடும் பிரபாகரனை கவர்ந்த நூல்கள் பல. இந்திய சுதந்திரப் போராட்ட பின்னணியில் உருவான கா.சு. நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் நரசய்யா எழுதிய கடலோடி போன்ற நூல்களால் பிரபாகரன் கவரப்பட்டார். பிரபாகரன் இலக்கிய உலகம் விசாலமானது.மிக இளம் வயதிலிருந்து திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் இருந்தது. பின்னாளில் நியூயார்க் மேயராக பதவி வகித்த கிளின்ட்ஸ்வுட் நடித்த படங்களை தாம் விரும்பிப் பார்த்ததாக சண்டே சஞ்சிகையின் பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் அவர்களுக்கு கொடுத்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த இளைஞர்களைப் பற்றிய ஒரு ஆங்கிலப் படம் தான் ஆபரேசன் டே பிரேக் என்ற படமாகும். இந்த படம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு முன்னால் இருந்த இராணி திரைப்பட அரங்கில் திரையிடப்பட்டது. விடுதலை உணர்வு கொண்ட இளைஞர்கள் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்தார்கள்.

Read More...
Paperback
Paperback 999

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்

உயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி மூன்று- இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி  எண்பத்தி மூன்றில் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது பதினோறாவது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த முப்பத்தி மூன்று ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் - புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.

மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஐந்து முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All