You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palவாழ்க்கை ஒரு பூமராங்!
2020-ஆம் ஆண்டு. ஊரே வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் கால கட்டம். ஆனாலும் தொழில் நுட்பம் பள்ளியையும், அலுவலகத்தையும் மட்டுமல்ல உலகத்தின் அத்தனை நிகழ்வுகளையும் இன்று வீட்டிற்கே அழைத்து வந்து விட்டது. இது எதையுமே அறியாத அந்த காலத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் இந்த பூமராங். நம்மை அறியாமல் நாம் சுழற்றி எறியும் பூமராங், திரும்ப நம்மையே வந்து தாக்கும் என்பதை உணர்த்தும் கதை 'வாழ்க்கை ஒரு பூமராங்'.
கோ. கமலவேணி பிரபாகரன்
மத்திய அரசு அலுவலகத்தின் பணியிலிருந்து ஓய்வு பெற்று, எழுபது வயதைக் கடந்தவர் கோ.கமலவேணி பிரபாகரன். தலைமுறை தலைமுறையாக வரும் பழமையான நம்பிக்கைகளின் வழியே வந்த நாயர் குடும்பத்தை சேர்ந்த இவர், சென்னையில் ஒரு காவலர் குடியிருப்பில் பிறந்து வளர்ந்தாலும் வீட்டிற்கு உள்ளே மலையாளத்தில் தான் பேச வேண்டும் என்ற பெரியோர்களின் கட்டுப்பாட்டில் தான் வளர்ந்தார். வீட்டின் எல்லைக் கோட்டை தாண்டி பரந்து கிடக்கும் தமிழின் அழகில் தன்னை மறந்து கலந்தார். எழுதவும், படிக்கவும் தெரியாத அக்கம் பக்கத்தினருக்கு கடிதம் எழுதவும், கதை படிக்கவும் உதவியவருக்கு தானே எழுத வேண்டும் என்ற ஆவல் மிகுந்தது. கணவரின் ஆதரவாலும், உறவுகள் தந்த ஊக்கததாலும் உருவானது தான் இந்த கதை. இதை புத்தகமாக பார்க்க வேண்டும் என்பது மறைந்த இவர் கணவர் பிராபாகரனின் மறையாத கனவு.
The items in your Cart will be deleted, click ok to proceed.