Share this book with your friends

VIMARSANAM; PALLIYUM VAAZHVUM / விமர்சனம்; பள்ளியும் வாழ்வும்

Author Name: Tamizhdesan Imayakappiyan | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

அன்பார்ந்த சித்திரை நிலா அவர்களுக்கு வணக்கம்.

தாங்கள் அறிவியல் ஆசிரியையாக உங்கள் முதல் அனுபவத்தை நான் பணியாற்றிய இடத்தில் பதிவு செய்து தாங்கள் கடந்து வந்த பாடசாலை ,கல்லூரி மற்றும் குடும்பம் குறித்தெல்லாம் பகிர்ந்து கொண்டீர்கள் நெருப்பும் நெருஞ்சிகளும் அயராது தொடர்ந்து கொண்டிருந்ததை அழுகையை விடுத்து, அரியனை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஒற்றைக்காலில் நொண்டி கட்டடத்தை தாண்டுவது (விளையாட்டு) போல தாண்டி கொண்டே இருக்கிறேன்.

அடுத்த ஆண்டு ஆசிரியர் தேர்வு எழுதி விடுவேன். ஓராண்டாவது ஒரு நிறை நிலைப் பள்ளி அனுபவம் வேண்டும் என்றும், அதன் பணி எப்படி இருக்கும் என்பதை அறியவே நான் வந்தேன் என ஒரு பெண் புலியாய் உரக்கச் சொன்னீர்கள். மேலும் ஏதாவது ஒன்றில் தம்மை கூர்மையாக வளர்த்துக்கொள்வதற்கான தேடல் வழிகாட்டியாக யாராவது ஒருத்தர் இருப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே தான் வந்ததாக ஒரு போர் மறதியைப் போல் அஞ்சாத பேசி முடித்தீர்கள். தாங்கள் அரசு பணிக்கு போகும்வரை எண்டிசை போல எட்டு மாதங்கள் பகிர்தலாகவே நாம் பயணித்தோம்.

Read More...
Paperback
Paperback 1050

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All