You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palகதை - கட்டுரை - பாடல்
*சாந்தி பூந்தி
சவுக்காரக் கட்டி
கோதம்ப ரொட்டி
கொண்டு வாடி குட்டி
*நாண்டா ஒங்கொப்பண்டா
நல்லமுத்து பேரண்டா
வெள்ளிப் பிரம்பெடுத்து
விளையாட வாரண்டா
தங்கப் பிரம்பெடுத்து
தாலிகட்ட வாரண்டா
*அவரவர் வீட்டுக்கு
அவரைக்காய் சோத்துக்கு
புள்ள பெத்த வீட்டுக்கு
பூசணிக்காய் சோத்துக்கு
நாம் போறேன் வீட்டுக்கு
நாளைக்கு வந்தா கேட்டுக்கோ
*தத்தைக்கா புத்தைக்கா தவளச்சோறு
ஒரு எட்டு
எருமை பால் கறக்க க
ள்ளன் கையில் காசு கொடுக்க
என்கிட்ட இல்ல உன்கிட்ட இல்ல
துப்பிளிக்கா துப்பிளிக்கா
*அந்தோணியம்மா குந்தாணி
அரைக்கமாதா கண்ணாடி
நெல்லரைக்க போகையில
நெளிஞ்சு போச்சாங் கண்ணாடி
வரகரைக்க போகையில
வளஞ்சு போச்சாங் கண்ணாடி
*மொட்ட மொழங்குதாம்
மொளகாத் தண்ணிக் கொதிக்குதாம்
சாம்பிராணி இல்லாம
சாமி வந்து ஆடுதாம்
*ஓட்டப்பல்லு சங்கரா
ஒரு வீட்டுக்கும் போகாத
ஆப்பம் வாங்கித் திங்காதே
அடி வாங்கிச் சாகாதே
*வேலு வெள்ளாட்டம் தோலு
வீட்டைச் சுத்தி பேலு
*முத்தம்மா புருஷன் மோளக்காரன்
மோளத்த வச்சுக்கிட்டு
பேளப் போனான்
நரியோ நாயோ தூக்கிட்டு போயிருச்சு
*அடியே பிள்ள இராமாயி
அரிசிக்காரன் வாராண்டி
சின்ன வீட்ல ஒளிஞ்சுக்கோ
சிலுக்கு சட்டையை போட்டுக்கோ
*ஐ சக்கா ஐ
அரப்படி நெய்
சீனாக்காரன் தலையில
தீயைக் கொளுத்தி வை
TAMIZHDESAN IMAYAKAPPIYAN
உயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்
83 - இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர் உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்
எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன் பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள் கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் - புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்
மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன் உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது
The items in your Cart will be deleted, click ok to proceed.