Share this book with your friends

CHRISTHAVA ARASIYAL / கிறிஸ்தவ அரசியல் A Christian’s Response to Politics

Author Name: Sujith S | Format: Paperback | Genre : Philosophy | Other Details

சரியான பாதை எதுவென தெரியாத நிலையில் நாம் இருக்கும் போது, வரலாற்றுச் சம்பவங்கள் நமக்கான பாதைகளை சாட்சிகளாக நமக்கு காட்டுகின்றன. இத்தகைய வரலாறுகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவன் நமக்களித்த வரலாற்று அறிஞர்கள் மூலமாய் அதிக தியாகத்தோடும் அர்ப்பணிப்போடும் அடுத்த தலைமுறைக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும், பொக்கிஷமாகவும் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வரிய செல்வத்தை நமக்கு மட்டுமல்லாமல், நம் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வது நம் மேல் விழுந்த தலையாய கடமையாகும். அந்த அளப்பரிய பணியை செய்ய அர்ப்பணிக்கப்பட்ட இயக்கங்களுள் கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கமும் ஒன்று.

இந்நூலை ஆக்கியோன் இறையியல் ஊழியரான திரு சுஜித் அவர்கள் பெத்தேல் இறையியல் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு இறையியல் (B.D) படிப்பையும் பயின்றுள்ளார். தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலத்தில் 2022 ஆம் ஆண்டு முதல்  உபதேசியாகவும் ஊழியம் செய்து வருகின்றார். திருச்சபை வரலாற்றுப் பணிகளிலும், கள ஆய்வுப் பணிகளிலும், வரலாற்றுச் சங்க மாத இதழிலும் கட்டுரைகளை எழுதி வருகின்றார். இந்நூல் அவர் எழுதிய இந்த நூல் “கிறிஸ்துவ அரசியல்” நூலை படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் அரசியலில் தங்களின் பங்களிப்பை பற்றியும், இயேசு கிறிஸ்து, ஆதி திருச்சபையின் அரசியல் சூழ்நிலைகளைப் பற்றியும், நீதி, நேர்மை பற்றிய கிறிஸ்தவ எண்ணங்களையும் பிரதிபலிக்கின்றது.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

சுஜித் செ

திரு. சுஜித் அவர்கள் தென்காசி மாவட்டம், மேற்கு திருநெல்வேலி என்ற நல்லூரை சேர்ந்தவர். இவருடைய தகப்பனார் திரு.S. செல்வராஜ், தாயார் திருமதி. ரஜினி செல்வராஜ் அவர்கள். பள்ளிப் படிப்பை நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியிலும், வணிகவியல் இளங்கலை பட்டப்படிப்பை அழகப்பா பல்கலைக்கழகத்திலும், சமூகப் பணியில் முதுநிலைப் பட்டமும், மேலாண்மை கணக்காளர் படிப்பில் இடைநிலை படிப்பையும் மற்றும் பெத்தேல் இறையியல் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு இறையியல் (B.D) படிப்பையும் பயின்றுள்ளார். தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலத்தில் 2022 ஆம் ஆண்டு முதல்  உபதேசியாராகவும் ஊழியம் செய்து வருகின்றார்.

பராபரனின் பெரிதான கிருபையினால் தற்சமயம் தென்காசி மாவட்டம், தென்காசி வடக்கு சீயோன் திருச்சபையின் கிளை சபையான இடைகால் திருச்சபையில் பணி செய்து வருகின்றார். திருச்சபை வரலாற்றுப் பணிகளிலும், கள ஆய்வுப் பணிகளிலும், வரலாற்றுச் சங்க மாத இதழிலும் கட்டுரைகளை எழுதி வருகின்றார். திருச்சபை வரலாறுகளைப் பற்றி அடிக்கடி சபைகளிலும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. அவருடைய முயற்சியில் முதல் புத்தகமாக இது வருவதன் மூலம் பராபரனின் நாம் மகிமைப்படுவதாக.

Read More...

Achievements

+9 more
View All