Share this book with your friends

Dhachanin Kadhai / தச்சனின் கதை தச்சனின் கவிதைப் பயணம்

Author Name: "siluvai Siddhar" Joseph Mohan Kumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

மனிதநேயத்தின் அடையாளமாய் மண்ணுலகில் வாழும் மனிதர்களால் போற்றப்படும் இயேசுவின் வாழ்க்கைச் சக்கரத்தை தனது மனப்பரப்பில் ஓடவிட்டு, சிலுவைச் சித்தர் ஜோசப்மோகன் குமார் எழுதியுள்ள, 'ஒரு தச்சனின் கதை' எனும் நூல் புதுக்கவிதைப் பூக்களால் தொடுக்கப்பட்டுள்ளது. கவிதைகள் படிக்க படிக்க தித்திக்கிறது. எழுதுகோலை தூரிகை யாக்கி வார்த்தை மை எடுத்து இவர் தீட்டியுள்ள கவிதைகளை வெறும் எழுத்துக்களாக பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு கவிதையும் உயிர்பெற்ற ஓவியமாகவே புத்தகம் முழுவதும் நிறைந்திருக்கிறது.


புத்தகத்தின் முதல் பக்கம் தொடங்கி முற்றுப்பெற்ற பக்கம் வரை வர்ணனை மழைகளால் படிக்கின்றவர்களின் இதயங்களை நனைத்திருக்கிறார். சிலுவைச் சித்தர் வார்த்தைகளைத் தேடித் தேடி கையாண்டிருப்பதாகத் தெரியவில்லை. இயல்பாகவே இவரது குருதியோட்டத்தில் குழைந்தும், குவிந்தும் கிடக்கிறது கவிதை! 

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

“சிலுவைச் சித்தர்” ஜோசப் மோகன் குமார்

“சிலுவைச்சித்தர்” என அனைத்துக் கிறித்தவ இலக்கிய ஊடக உலகில் பரவலாக அறியப்பட்ட லா.ஜோசப் மோகன்குமார் “மோகனப்ரியன்” "யுரேகாலெமூரியன்” என்றப் புனைப்பெயர்களில் நீண்ட நெடுங்காலமாய், தன் கலை இலக்கியப்பதிவுகளை அறைகூவலாய் அறிவித்து வருகிறார்! யோசேப்பின் பலவர்ண அங்கியைப் போல, பல்வேறு தாலந்துகளை பெற்ற இவரது படைப்புகள் மாற்று விடுதலை இறையியலையும், வர்க்கப்போராட்டத்தின் வரலாற்றுச் சத்தத்தையும் வலுவாக ஒலிப்பவை! இவரது, "கவண்கல் கவிதைகள்” “தினம் ஒரு தீப்பந்தம்” “பகுத்தறிவு கிறிஸ்வதம்”, போன்ற பல்வேறு தொகுதிகள் பல்வேறு இறையியல் கல்லூரி மாணவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டவை பாரம்பரியமிக்க தமிழ் சுவிசேஷலுத்தரன் திருச்சபையின் (TELC) கௌரவ ஆயராகவும், பன்னாட்டு லுத்தரன் கூட்டமைப்பு & பேரவை (ILCC)-யின் தலைவராகவும், இந்திய ஆங்லிக்கன் திருச்சபையில் (ACI&CEEC) பேராயராகவும் பணியாற்றிவரும் இவர், உலகின் முதல் திரைப்பட உலகிற்கான கோலிவுட் To கொல்கதா என்ற திருச்சபையை நிறுவியவர்! இரண்டு வருடங்களாக இறை வேண்டலோடு எழுதப்பட்ட இந்த “தச்சனின் கதை”, இயேசு கிறிஸ்துவின் புதுக்கவிதை வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல, இயேசுவின் விடுதலை இறையியலோடு பல்வேறு இயல்களையும் உள்ளடக்கிய ஆவணப் பதிவாகும்!

Read More...

Achievements

+9 more
View All