Share this book with your friends

THOMAS GAJETAN RAGLAND / தாமஸ் கெஜற்றன் ராக்லாந்து Apostle of North Tirunelveli

Author Name: Prof. Rev. D. A. Christadoss | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

வட “நெல்லை அப்போஸ்தல”னின் வாழ்க்கை வரலாறெழுதும் சிலாக்கியத்தைப் பெற்ற யாம், அதை எமக்குக் கிட்டின பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனம். நெல்லையத்தியட்சாதீனத்தின் முது பெருங்குருவாம் கனம் கனோன் S. பால் மாணிக்கம் ஐயரவர்கள், வடதிருநெல்வேலிக்கு அனுப்பப்பட்ட தெய்வத் திருதொண்டன் கனம் தாமஸ் கெஜற்றன் ராக்லந்து ஐயரவர்களின் வரலாற்றை ஒரு சிறு நூலாக எழுதித் தரவேண்டும் என்று கேட்டபொழுது (1973) அதை அப்பெரியார் மூலமாக எம்பெருமான் இயேசுநாதர் அனுப்பிய ஒரு  கட்டளையாக மதித்து, கர்த்தருடைய சுத்தக் கிருபையினருளினால் அந்நூலை ஆக்கி முடித்தனம் (1975). கனோன் ஐயரவர்கள் அதைத் தங்கள் சொந்தச் செலவில் வெளியிட்டார்கள். ஆயிரம் பிரதிகளும் ஒரு சில மாதங்களுக்குள் விற்பனையாகிவிட்டன. நூலை வாங்கவேண்டுமென்று விரும்பின பலருக்குப் பிரதிகள் கிடைக்கவில்லை. எனவே இரண்டாம் பதிப்பை வெளியிட வேண்டிய நிலையேற்பட்டது. 

கனம் பால் மாணிக்கம் ஐயரவர்கள் அப்பொறுப்பை எம்மிடம் விட்டுவிடவே, யாம் பெத்தேல் நிறுவனத்தாரை அண்மினோம். அவர்களும் மனமுவந்து அப்போஸ்தலனின் வாழ்க்கை வரலாற்று நூலை மறுபதிப்புச் செய்ய முன் வந்தனர். அவர்களுக்கு எம் நன்றி. 

''நண்பர் சுவிசேஷ நற்பணி ஜெபக்குழு”வினரின் ஓவியப் பெருந்தகை திரு நவநீதர் அவர்கள் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட நூலொன்றினின்று ராக்லந்து ஐயரவர்களுடைய உருவப்படத்தை வர்ணப்படமாக்கித் தந்து உதவினார்கள். அவர்களே “வட நெல்லை மூவர்" வாழ்ந்ததும், அப்போஸ்தலன் வாழ்ந்து இறந்ததுமான பங்களாவையும், அப்போஸ்தலனின் கல்லறையையும் மேற் சொன்ன நூலில் பிரசுரிக்கப்பட்டிருந்த வண்ணமே வரைந்து தந்தார்கள், அவர்களுக்கு எம் நன்றி உரித்து. 

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

பேராசிரியர் அருள்திரு தே அ கிறிஸ்துதாஸ் ஐயர்

பேராசிரியர் அருள்திரு தே.அ. கிறிஸ்துதாஸ் இயர் (19121990) அவர்கள் தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் பிறந்து, வளர்ந்தவர். பள்ளி ஆசிரியர், வேதாகமக் கல்லூரி பேராசிரியர், முதல்வர், அருட்பணியாளர் மற்றும் எழுத்தாளர் என பல துறைகளிலும் ஜொலித்தவர். திருச்சபையின் வரலாறு மற்றும் திருச்சபையின் வெற்றிக்குக் காரணமான தேவ மனிதர்கள் பற்றி நாம் அறிந்து கொள்ள இவர் எழுதிய நூல்கள் ஒரு திறவுகோல் என்றால் அது மிகையாகாது. எளிய மற்றும் வட்டார வழக்கு தமிழில் எவரும் புரிந்து கொள்ளும்படி ஆராய்ச்சி மற்றும் வரலாற்றுப் புத்தகங்களை எழுதுவது இறைவன் இவருக்குக் கொடுத்த வரம். அநேக புத்தகங்களை மட்டுமல்ல, அநேக கிறிஸ்தவ தலைவர்களையும் இவர் தன் திருப்பணி மூலமாக உருவாக்கி இருக்கின்றார். -

இந்நூலை எழுதிய சரித்திர பேராசிரியர் அருள்திரு தே.அ. கிறிஸ்துதாஸ் ஐயர் அவர்கள் திருச்சபையில் தடம் பதித்த மகத்தான தேவ மனிதர்கள் பற்றி ஏராளமான நூல்கள் எழுதி இருக்கிறார். வட நெல்லை அப்போஸ்தலர் கனம் ராக்லாந்து ஐயரவர்களின் ஜீவிய சரித்திரத்தை கவனித்து படித்து ஓரளவாவது அவரது முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.

"ஆம், நானும் போகாவிட்டால், போவது யார்? இதோ இருக்கிறேன் என்னை அனுப்பும் கர்த்தாவே", என்று கூறித், தன்னைத் தன் ஆண்டவரிடம் ஒப்புவித்தவராகச் சாத்தானை ஜெயித்த ராக்லாந்து வாழ்க்கை சரித்திரம் இக்காலத்திற்கும் நமக்கும் நமக்கு பின் வரும் சந்திக்கும் பொருத்தமானதாகவும் நம் முன் ஒரு சவாலையும் வைக்கிறது.

Read More...

Achievements

+9 more
View All