செல்ல மகள்

?. ?????
கற்பனை
5 out of 5 (2 )

யப்பா யப்பா எங்க பள்ளிக்கூடத்துல எல்லாரையும் ஒரு வாரம் கழித்து சுற்றுலா கூட்டிட்டு போறாங்கப்பா ஒரு வாரம் சுற்றுலா வாமாம்ப்பா நானும் போகவாப்பா என்று கூறிக் கொண்டே தனது புத்தகப் பையை தூக்கி வீசியபடி ஓடி வந்தாள் முருகனின் செல்ல மகள் அருந்ததி....
அருந்ததி குக்கிராமத்தில் வாழும் ஏழை விவசாயின் முருகனின் மகள் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் குழந்தை இல்லாமல் ஏறாத மலை இல்லை சுற்றாத கோவில் இல்லை அப்படி தவமிருந்து பெற்ற மகள். அவளின் தந்தையோ விவசாயி அவரின் வருமானம் அன்றாடம் உணவிற்க்கும் செலவுக்குமே சரியாக இருக்கும். அருந்ததியின் அம்மா கலாமணி பெரிதாக படிப்பு ஒன்றுமில்லை. கலாமணியும் கணவனுக்கு துணையாக தன் பங்கிற்க்கு கிடைக்கும் சின்ன சின்ன வேலைகள் செய்து பிள்ளையையும் குடும்பத்தையும் கவனித்து வந்தாள். புத்தகப் பையை வீசியதை பார்த்த கலாமணி, அருந்ததியை பார்த்து, என்னடி பைய இப்படி வீசிட்டு போறவ, மெதுவா வைச்சுட்டு தான் போறது. வீசுற அளவுக்கு அப்படி என்ன ஆச்சு இப்ப என்று கேட்க" காதில் விழாதது போல் சென்றாள் அருந்ததி. நேராக அப்பாவிடம் சென்று "யப்பா எங்க பள்ளிக்கூடத்துல சுற்றுலா கூட்டிப் போறாங்கப்பா, எல்லாரும் போறாங்கப்பா பக்கத்து வீட்டு பரிமளாவும் போராப்பா, எனக்கும் போகணும்னு ஆசையா இருக்குப்பா, நானும் போகவாப்பா" என்று குழந்தை போல அப்பாவிடம் கேட்டாள் அருந்ததி... வீட்டிற்க்கு ஒரே மகள் அதுவும் செல்ல மகள் என்பதால் முருகனும் மகளிடம் "சரி புள்ள சுற்றுலா செல்ல எவ்வளவு ரூவா ஆகும் என்று கேட்க " மகளோ ஆயிரம் ரூவா ஆகும்ப்பா என்று தன் பிஞ்சு முகத்தில் புன்னகையுடன் கூறினாள்..முருகனோ சிறிது நேரம் யோசித்து கொண்டிருக்க.அருந்ததி கூறியது கலாமணியின் காதில் விழ "என்னாடி சொல்ற ஆயிரம் ரூவாவா கொஞ்சம் மனசாட்சியோட பேசுடி, நம்ம இப்ப இருக்க நிலைமைக்கு இப்ப நீ சுற்றுலா போகணுமா, அடியே ஆயிரம் ரூவா இருந்த மழை வந்த உள்ள தண்ணி வராம இருக்க நம்ம வீட்டை சரி பண்ணலாம். அதுவும் இல்லாம உங்க அப்பனக்கு அப்ப அப்ப ஒடம்பு முடியாம போகுது, அது என்னனு ஒரு எட்டு ஆஸ்பத்திரியில போய் பாத்துட்டு வந்துருலாம். உனக்கு போட்டுக்க நல்ல துணி மணி வாங்கிறலாம். என்று அடுக்கிக் கொண்டே போனால் கலாமணி." இதை கேட்ட செல்ல மகளுக்கு முகம் வாடியது.யாரிடமும் பேசமால் அமைதியாக இருந்தாள். அம்மாவோ சாப்பிட பலமுறை அழைத்தும் எதற்கும் செவி சாயிக்கவில்லை அருந்ததி.அழுது கொண்டே இருந்தாள் அருந்ததி. அவள் கண்களில் நீர் வருவதை கவனித்த முருகன் மகளை அழைத்து மடியில் அமரவைத்து. "என் மக எதுக்கும் முகம் வாடி போகக்கூடாது. அழக்கூடாது எப்பவும் முகத்துல சிரிப்பு இருந்துகிட்டே இருக்கனும். நீ ஒன்னும் கவலைப்படாத ஆயிரம் ரூவா தான நான் பாத்துக்குறேன் கண்ணு நீ கண்டிப்பா சுற்றுலா போவ நான் ரூவா தாரேன்" என்று சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தான் முருகன். மகிழ்ச்சியடைந்த அருந்ததி முருகனின் மடியிலேயே உறங்கிக் போனாள். மெல்ல கணவனின் அருகில் வந்த கலாமணி "என்னங்க அவதா சின்னப் புள்ள விவரம் இல்லாம கேக்குற நீங்களும் சரி சொல்லி தூங்க வச்சுட்டீங்க அப்பறம் போற அப்ப இல்லனு சொன்ன மனசு உடைஞ்சு போயிருவா. வேணாமுங்க காலையில அவகிட்ட, இப்ப வேணா இன்னொரு வருஷம் போய்கிலானு சொல்லிருங்க" என்று சொல்ல. அடப் போடி கிறுக்கச்சி நமக்கு புள்ள இல்லாம தவமா தவமிருந்து கிடைச்ச புள்ள. ஆசையா வந்து அப்பன்கிட்ட கேக்குது அத போய் முடியாதுனு சொல்ல சொன்னா புள்ள தாங்கிக்குமா. அதும் இல்லாம எல்லாரும் போகும் போது எம்புள்ள ஏக்கத்தோட நின்னு பாக்கும், பள்ளிக்கூடத்துல புள்ளைங்க எல்லாம் நாளைக்கு சுற்றுலா போய்ட்டு வந்ததா அங்க என்னென்ன நடந்துச்சோ அத பத்தியே பேசுங்க. இத கேக்குற நம்ம புள்ள ஏங்கி போய்யிற மாட்டளா,அவ மனுசுக்குள்ள நானும் போயிருந்த எல்லாம் பாத்துருக்கலானு ஏங்கி தவிச்சு போய்யிற மாட்டா, முகம் வாடி அங்க என்ன சொன்னாங்லோ அத நம்மகிட்ட வந்து சொல்லி அழுவா. அப்படி சொல்லிறக் கூடாதுனு தான் நான் பாத்துக்குறேன்னு சொன்ன என்றான் முருகன்.. என்னமோ போங்க எனக்கு ஒன்னும் புரியல நீங்களும் உங்க புள்ளையையும் என்னமோ பண்ணிக்கோங்க என்றாள் கலாமணி.கவலைப்படாத மணி நமக்கு நம்ம வயல் இருக்கும் போது என்ன கவலை நல்லா விளஞ்சு நிக்குது அத அறுவடை செஞ்சா நல்ல லாபம் கிடைக்கும். அதுல வரத வச்சு புள்ளைய சுற்றுலா அனுப்பலாம்... என்று கூற, அவளும் சரி பாப்போம் என்று கூறி உறங்க சென்றாள்... முருகனும் வயலை நினைத்துக் கொண்டு அப்படியே உறங்கிப் போனான்....
காலையில் அருந்ததி வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்ப மீண்டும் ஒரு முறை அப்பாவிடம் கேட்டாள்...
"யப்பா கண்டிப்பா என்ன சுற்றுலாக்கு அனுப்புவல்ல, அப்பறம் முடியாதுனு சொல்லிற மாட்டயே என்று கேட்டாள்...
முருகனும் இல்லை புள்ள கண்டிப்பா உன்ன அனுப்புறன் இப்ப பள்ளிக்கூடத்துக்கு பாத்துப் போய்ட்டு வா என்று வழியனுப்பி வைத்தான் முருகன். அவளும் மிகவும் மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்றாள் ... பள்ளி சென்ற அருந்ததி பள்ளி தோழிகள் சுற்றுலா பற்றி பேசிக் கொண்டிருக்க,அருந்ததி நானும் உங்களுடன் சுற்றுலா வருவேன், என் அப்பா அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார், உங்களுடன் நானும் சுற்றுலா வந்து சுற்றி பார்க்க போகிறேன் என்று பேராசையோடும் ஆனந்தத்தோடும் கூறிக் கொண்டிருந்தாள்... அன்றைக்கு என்றும் இல்லாத மகிழ்ச்சி அருந்ததிக்கு,... மகள் பற்றிய நினைப்பில் மூழ்கி போன முருகன் வயல் பக்கம் செல்லாமல் இருந்தான் சட்டென்று யோசனை வர, முருகன் அடடே மறந்தே போச்சு இன்னும் இரண்டு நாட்களில் அறுவடை பண்ணனும் இல்லனா அப்பறம் பண்ண முடியாது, இதை எப்படி நான் மறந்தேன்,என்று புலம்ப இதைக் கேட்ட கலாமணி, "என்னங்க இப்படியா மறந்து போறது சீக்கிரம் வயலுக்கு போங்க என்று கூற " முருகனும்புலம்பிய படி வயலுக்கு புறப்பட்டு சென்றான்... வயலை சென்று பார்த்தான். பயிரும் நல்ல செழிப்பாகா இருந்தது. அறுவடைக்கு தயாராக இருந்தது. அறுவடைக்கு செய்ய வேண்டியதை என்ன செய்ய வேண்டுமோ அனைத்தும் செய்து விட்டு பயிருக்கு புதிதாக ஒரு மருந்தை தெளித்தான், அந்த மருந்து அறுவடையின் போது இப்பொழுது உள்ளது போல் இன்னும் செழிப்பாக இருக்கும் என்று புதிய மருந்தை அடித்து விட்டு மன நிம்மதியுடன் வீடு திரும்பினான்... அவனும் வீடு வர செல்ல மகளும் பள்ளி முடிந்து வீடு வந்தாள்...யப்பா யப்பா எங்க இருக்கப்பா என்று கூவிக் கொண்டே வர எதிரே வந்தான் முருகன். எம்புள்ள இப்படிக் கூவிக்கிட்டே வரவ. யப்பா நீ சொன்னனு நான் பள்ளிக்கூடத்துல எல்லார்கிட்டயும் சொல்லிட்டன். நீ மட்டும் எனக்கு ரூவா தரல அப்புறம் நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது. என்று கூறிவிட்டு யப்பா நான் பரிமளா வீட்டுக்கு போறன். பிறகு வரேன்னு சொல்லிட்டு அங்கிருந்து மறைந்தாள் அருந்ததி...
புள்ளையின் மிரட்டலைக் கேட்ட முருகன் சிரித்தபடி ரசித்தான்...
வழக்கம் போல் அனைவரும் சாப்பிட்டு உறங்கினர், கனவிலும் தன் பிள்ளை மிரட்டுவது போன்று கனவு கண்டு சிரித்துக்கொண்டிருந்தான் முருகன்...
மறுநாள் காலை வயலுக்கு சென்று கொண்டிருக்கும் போது ஊரில் அனைவரும் பயிருக்கு புதிதாக தெளிக்கப்பட்ட மருந்தை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். முருகனும் அவர்களை பார்த்தபடி செல்ல மறுபடியும் அவர்கள் புதிதாக வந்த மருந்தை பற்றி பேச முருகனுக்கு ஒன்றும் புரியவில்லை... முருகனின் நண்பன் செல்வம் அங்கு இருக்க, முருகன் செல்வத்திடம் "அடேய் செல்வா என்னாச்சு என்ன நடக்குது இங்க என் எல்லாரும் இப்படி பேசிட்டு அப்படி இப்படியுமா ஓடிக்கிட்டு இருக்காங்க என்னடா ஆச்சு. கொஞ்சம் சொல்லு என்று கேட்க... செல்வம் "அடேய் முருகா நம்ம பயிருக்கு புதுசா ஒரு மருந்து வந்துச்சுனு அத வாங்கி தெளிச்சோம்ல அந்த மருந்து உண்மையான மருந்து இல்லையா, பொய்யான மருந்தாமாடா அதனால பயிரெல்லாம் வீணாப் போகுதாமா என்று கூற, இதைக் கேட்ட முருகனுக்கு ஒரு நிமிடம் இதயமே நின்று விட்டது. அதிர்ச்சியில் மயக்கம் போட்டு கீழே விழுந்தான் முருகன், இதைக் கண்ட செல்வம் செய்வதறியாது முருகன் முகத்தில் தண்ணீர் தெளித்தான் மயக்கம் கலைத்து எழுந்து உட்கார்ந்த முருகனிடம் என்ன ஆச்சு என்று விசாரிக்க ஆரம்பித்தான் செல்வம். "என்னடா ஆச்சு ஏன் உடம்பு எதும் சரியில்லையா உனக்கு என்று கேட்டான் செல்வம்... அவனின் இந்த கேள்விக்கு முருகன் தலையில் அடித்த படி அழுது கொண்டே "அடேய் நானும் அந்த மருந்த வாங்கி என் பயிருக்கு தெளித்து விட்டேனடா, என் பயிரும் இப்ப என்ன ஆச்சோ என்று வாயிலும் வயித்துலையும் அடித்துக் கொண்டு வயலுக்கு ஓடினான் முருகன்.அவனை பின் தொடர்ந்து சென்றான் செல்வம் வயலுக்கு சென்ற முருகனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது, வயலில் பயிரெல்லாம் வீணாகி விட்டது. அனைத்தும் மாலையில் தலை குனிந்து கொள்ளும் சூரிய காந்தி போல் தலை தொங்கிய படி இருந்தது, காரணம் விவரம் அறியாமல், நன்கு புரிந்து கொல்லாமல் புதிய மருந்தை வாங்கி தெளித்ததின் விபரீதம். அனைத்து பயிர்களும் வீணாகி விட்டது. இப்பொழுது என்ன செய்வதேன்று தெரியாமலும், ஒன்றும் புரியாமலும் கத்தி அழுதான் முருகன். " அய்யோ இப்ப எல்லாம் போச்சே இப்ப நான் என்ன செய்வன், நல்ல விளைச்சல் வரும், நல்ல லாபம் வரும்னு நெனச்சு தானே புது மருந்த வாங்கி நான் பயன்படுத்துன இப்ப இப்படி ஆகி போச்சே நான் என்ன பண்ணுவன், இத நம்பித்தானே எம்புள்ளை கிட்ட வாக்கு கொடுத்தன், கண்டிப்பா உன்ன சுற்றுலா அனுப்பி வைக்கிறேன்னு சொல்லிபுட்டனே, இப்ப இப்படி ஆயிருச்சே நான் எங்க போய் சொல்லுவன்.. எம்புள்ள வந்து ரூவா எங்கனு கேட்டான் நான் என்னனு சொல்லுவன், எப்படினு சொல்லுவன் என்று கதறி அழுது கொண்டிருந்தான் முருகன். இதைக் கண்ட செல்வம் முருகனை சமாதானப்படுத்தி "எல்லாம் சரி ஆகிடும் கவலைப்படாத முருகா சரி பண்ணிரலாம். நல்ல மருந்து தானே வாங்கி அடுச்ச, இப்ப இப்படி ஆகும்னு யாரு நெனச்சா, விடு முருகா போனது போச்சு இனி என்ன பண்ணலாம்னு யோசிப்போம் என்று கூற, முருகன் மீண்டும் அதையே கூறி அழுதான் "சரிப்பா நீ சொல்றதும் நியாயம் தான் ஆன இப்படி ஆகும்னு நாம என்ன கனவா கண்டோம். சரி விடுப்பா வேற ஏதா பண்ணலானு சொல்லிக் கொண்டு முருகனை சமாதானம் செய்து முருகனை வீட்டிற்கு கூட்டி சென்றான் செல்வம். மனமுடைந்த முருகன் வீட்டிற்க்கு சென்று நடந்தவற்றை அனைத்தும் கலாவிடம் கூறினான்.. அவளும் " என்னயா சொல்ற நல்ல மருந்தா பாத்து வாங்கி தானே அடுச்ச அப்படி இருந்தும் எப்படி இப்படி ஆச்சு என்று அவளும் அழ ஆரம்பித்தாள், " ஆசையா இருந்தயேயா, புள்ளய சுற்றலாவுக்கு அனுப்ப போறன்னு, இப்ப இப்படி ஆயிருச்சயேயா, இப்ப உம்புள்ள வந்து நான் சுற்றுலா போகணும்னு ரூவா எங்கனு கேப்பா, அவளுக்கு என்னயா சொல்ல போற, அதுக்கு தான் நான் அப்பவே சொன்ன வேணான்னு சொல்லிடுன்னு நீதான் கேக்கல, இப்ப இப்படி ஆச்சுன்னு சொன்னா மனசொடஞ்சு போயிருவாயா.என்று கூற முருகன் அழ ஆரம்பித்தான், சிறிது நேரத்தில் கலா சரி விடுங்க எல்லாம் சரி ஆயிடும் இப்ப அழுகுறதுனால எதும் மாற போறதில்லை, பாத்துக்குலாம் விடுங்க என்று ஆறுதல் கூற, இனி அந்த மருந்த வாங்க வேணாங்க வேற எதாவது பண்ணலாம் என்று கூறினாள் கலாமணி... ஆனா முருகனோ அது இல்லடி சரி பண்ணிக்கலானு எனக்கும் தெரியும், இப்ப எம்புள்ள ஆசையா வந்து என்கிட்ட நான் கேட்டது என்ன ஆச்சுன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லுவன் இன்னும் இரண்டு நாள்ல சுற்றுலா கூட்டி போக போறான்னு சொல்லிட்டு எவ்ளோ சந்தோசமா போன இப்ப வந்து கேக்கும் போது இப்படி சொன்ன எம்புள்ள மனசு ஒடஞ்சு போய்யிற மாட்ட அதுக்குத்தான் என்ன பண்றதுனு தெரில,என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே பள்ளி முடிந்து அருந்ததி வர வழக்கம் போல் அதையே சொல்ல முருகனும் சரி புள்ள கண்டிப்பா போவயாம்மா. போய் விளையாடு புள்ள என்று சொல்ல அவளும் ஆனந்தமாக விளையாட சென்று விட்டாள்... இரண்டு நாள்ல எப்படி ஆயிரம் ரூவா புரட்டுவனு தெரியலையே, யார் கிட்ட போய் கடன் கேக்குறதுனு தெரியல, அப்படியே கேட்டாலும் யார் தருவா நமக்கு, இப்ப என்ன பண்றது யார்கிட்ட போய் கேக்குறதுன்னு தெரியலையே,என்று யோசிக்க ஆரம்பித்தான் முருகன். பெரும் யோசனையில் மூழ்கிப் போனான் முருகன்.... யோசனையில் அன்றிறவு கடந்து போனது... காலை விடிந்ததும் வழக்கம் போல் அருந்ததி மீண்டும் சுற்றுலா பற்றி கூறிவிட்டு பள்ளிக்கு சென்றாள்... செல்வம் வீட்டிற்கு வர வந்தவனிடம் நிலைமையை சொல்லி கடன் கேட்க, அவனும் இல்லை என்று கூற, முகம் வாடிப் போனது முருகனுக்கு, ஆனால் செல்வம் அங்கு வந்தது வேறு ஒரு விடயம் சொல்ல, ஆனால் முருகனின் நிலையை பார்த்தவன், ஆறுதல் கூறிவிட்டு, வந்த விடயத்தை சொல்ல ஆரம்பித்தான். பக்கத்து ஊரில் தொழிற்சாலைக்கு வேலைக்கு ஆள் வேண்டுமென்று கூப்பிட்டார்கள் நான் செல்கிறேன் நீயும் வா நாம் போகலாம் இரண்டு நாள் தான் கிடைக்கும் பணத்தை கொண்டு ஏதாவது செய்வோம் என்று என்று சொல்லி போக வந்தேன் என்றான் செல்வம்... இதைக் கேட்ட முருகனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது, சரி நானும் உன்னுடன் வருகிறேன் என்று கூறினான் முருகன்,நாளை காலை தயாராக இரு நான் வந்து உன்னை அழைத்து செல்கிறேன் என்று கூறி சென்றான் செல்வம்... நாள் நெருங்க நெருங்க அருந்ததி அதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க... திடீரென்று முருகன் கலாமணியிடம் "நான் பயிர் விடயமாக நான் வெளியூர் போற வர இரண்டு நாள் ஆகும். நான் போய்ட்டு வரேன் அதுவரைக்கும் நிலத்தை பாத்துக்கோங்கனு சொல்ல. அருந்ததி யப்பா பள்ளிக்கூடத்துல சுற்றுலா கூட்டிப் போறாங்கன்னு நான் சொன்னல, நீ இப்ப போறன்னு சொல்ற நான் எப்படிப்பா போவன், நீ இல்லாம என்று செல்ல மகள் கேட்க,முருகன் நான் இரண்டு நாளைக்குள்ள வந்துருவ புள்ள கவலைப்படாத புள்ள. அப்பா வந்துருவேன் நான் வந்து உன்ன வழியனுப்பி வைக்கிறான் என கூறிக் கொண்டு செல்வனும், முருகனும் தன் பயணத்தை தொடர்ந்தனர்... செல்வமமும் முருகனும் பக்கத்து ஊரில் உள்ள தொழிற்சாலையில் வேலைக்கு சென்று அங்கு வேலை செய்ய தொடங்கினார்கள் .. இரண்டு நாட்கள் இரவும் பகலும் கடுமையாக உழைத்த முருகன் சரியான துக்கமும் இல்லாமல் சாப்பாடும் இல்லாமல் தன் மகளுக்காக கடுமையாக உழைத்து ஆயிரம் ரூவா சம்பாரித்து விட்டான்.. ஆயிரம் ரூவாயை பார்த்ததும் முருகனுக்கு மன நிம்மதியாக இருந்தது. தன் செல்ல மகள் சுற்றுலா செல்ல ஆயிரம் ரூவா கிடைத்து விட்டது. இனி என் மகள் ஆனந்தமாக சுற்றுலா செல்வாள் என்று நினைத்து பெருமூச்சு விட்டு சந்தோசப்பட்டான் முருகன்.... வேலை முடிந்ததும் இருவரும் ஊருக்கு புறப்பட்டனர்.. ஆனால் அருந்ததியின் பள்ளி தோழி ஒருவள் முருகன் படும் கஷ்டங்களை எல்லாம் பார்த்து விட்டாள்... வீட்டிற்க்கு வந்த முருகன் மனைவி கலா நலம் விசாரிக்க முருகன் தன் செல்ல மகளை சந்தோசமாக தேடினான். ஆனால் அவள் இல்லை மகளை பற்றி கலாவிடம் கேட்க, அவள் இங்கு இல்லை விளையாட சென்று விட்டாள் இப்பொழுது வரமாட்டாள், நீங்கள் கொஞ்ச நேரம் ஓய்வெடுங்கள் அவள் வந்து விடுவாள் என்றாள் கலா முருகனும் பயணம் செய்த களைப்பில் நன்றாக அயர்ந்துதூங்கிவிட்டான்..விளையாடி விட்டு வீடு வந்த அருந்ததி அப்பாவை பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தாள்..நாளை சுற்றுலா செல்ல வேண்டும் என்ன இவர் இப்படி தூங்குகிறார் என்று முருகனை எழுப்ப, நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான் முருகன்... எவ்வளவோ முயன்றும் அப்பாவை எழுப்ப முடியாமல் தோற்றுப் போனாள். அப்பாவின் மீது கோபம் கொண்ட மகள் எதுவும் சாப்பிடாமல் அழுகையில் உறங்கிப் போனாள்... காலை பொழுது விடிந்தது முருகனுக்கு முன் மகள் எழுந்து கொண்டாள். எப்பொழுது எழுந்திருப்பார் என்று எதிர் பார்த்து கொண்டிருந்தாள் அருந்ததி... இன்று நான் சுற்றுலா செல்ல ஆனால் இவர் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று கோபத்தில் இருந்தாள்... ஒரு வழியாக முருகனும் எழுந்திரிக்க, அருந்ததி கோபமாக நான் நாளை சுற்றுலா செல்ல வேண்டும் நான் கேட்ட ரூவா எங்கே என்று கோபமாக கேட்க, முருகனும் சிரித்துக்கொண்டே எடுத்துக் கொடுத்தான். கலாவோ எதையும் கூறாமல் அமைதிக் காத்தாள்... மிகுந்த மகிழ்ச்சியுடன் பள்ளி சென்றாள் அருந்ததி. சுற்றுலா செல்ல எல்லோருக்கும் அறிவுரை கூறிக் கொண்டிருந்தார் ஆசிரியர். ஆனந்தமாக இருந்த அருந்ததி சுற்றி முற்றி அனைவரையும்பார்க்க வகுப்பில் அவளின் தோழி ஒருத்தி மட்டும் சுற்றுலாவுக்கு என்னால் வர முடியவில்லையே என்று சோகத்தில் அமர்ந்திருந்தாள், அவள் அருகில் சென்று கேட்க, ஏன் நீ மட்டும் சோகமாக இருக்கிறாய் என்று கேட்க, அவளோ நான் சுற்றுலா வரல எங்கிட்ட அவ்வளவு ரூவா இல்ல நீ போய்ட்டு வா என்று கூற அருந்ததியோ பயங்கரமாக சிரித்தாள்.அவளின் சிரிப்பை பார்த்த தோழி, என் இப்படி சிரிக்கிற என்று வெகுளியாக கேட்க, அருந்ததி என்கிட்ட கூடதா ரூவா இல்ல எங்க அப்பா கிட்ட சொன்ன அவர் தான் கொடுத்தார். நான் கேட்ட என்னவேனாலும் செய்வாரு எங்க அப்பா என்று பெருமை பட்டுக் கொள்ள. அவள் தோழியோ நீ இப்படி பெருமையா சொல்லுறதுக்கு உங்க அப்பா எவ்ளோ கஷ்டபட்டாருனு உனக்கு தெரியுமா?எனக்கு தான் தெரியும் என்று சொல்ல ஒன்றும் புரியாமல் அருந்ததி நீ என்ன சொல்ற என்று கேட்க, அவள் தோழி அவர் இரண்டு நாட்கள் பட்ட கஷ்டத்தை எல்லாம் கூற, அருந்ததி கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது... பள்ளி முடிந்ததும் வேகமாக வீட்டை நோக்கி ஓடினாள். வந்தவள் புத்தகப் பையை தூக்கி வீசினாள். சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த முருகன். எம்புள்ள என்னாச்சு போய் நாளைக்கு போறதுக்கு எல்லாம் எடுத்து வை புள்ள இங்க இருக்குறவ. சீக்கிரம் போய் எடுத்து வை புள்ள என்றான் முருகன்... எதுவும் கூறாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள். மீண்டும் முருகன் கூற ஓடி வந்து முருகனை கட்டி அணைத்தால் மகள். அப்படியொரு அழுகை முருகன் எவ்வளவோ கூறியும் அழுகை நிற்க்கவில்லை.யப்பா என்ன மனுச்சுருப்பா. நீ இந்த ஆயிரம் ரூவா சம்பாதிக்க எவ்ளோ கஷ்டப்பட்டனு எனக்கு தெரியும்ப்பா. நான் சுயநலமா இருந்துட்டன்ப்பா என்னோட ஆசை நடந்த போதும்னு இருந்துடன்ப்பா. உன் நிலைமை கொஞ்சம் கூட புருஞ்சுக்காம நான் சந்தோசமா இருந்துட்டா போதும்னு இருந்துட்டன்ப்பா என்ன மனுச்சுக்கப்பா. சுற்றுலா என்னப்பா சுற்றுலா நான் உன்ன சுத்துனா அதுதா எனக்கு இன்பச் சுற்றுலா. என் உலகமே நீதாம்ப்பா உன்ன சுத்துனா நான் உலகத்தையே சுற்றுலாப் போய்ட்டு வந்த மாதிரிப்பா என்று அழுகையோடு கூறினாள் அருந்ததி.இதைக் கேட்ட முருகனின் கண்களில் கண்ணீர். அப்படிலா இல்லா புள்ள உன் சந்தோசம் தான் எங்க சந்தோசம் புள்ள போய்ட்டு வா புள்ள என்று கூற இல்லப்பா நான் போகல உன்ன விட்டு நான் எங்கையும் போக மாட்டப்பா போனா எல்லாரும் சேர்ந்து போலாம் இல்லனா வேனாப்பா என்று கூறினாள். என் புள்ள இப்படி சொல்ற நீ சந்தோசமா போய்ட்டு வரத்தான நான் ரூவா கொடுத்த இப்ப இப்படி சொல்றவ... நீ இந்த ரூவா சாம்பாதிக்க எவ்வளவு கஷ் ப்பட்டனு எனக்கு தெரியும்ப்பா. அத மறந்துட்டு நான் எப்படிப்பா சந்தோசமா போவ. நீ கஷ்டப்பட்டு சம்பாதிச்சு நான் சந்தோசமா இருக்கவா வேணாம்ப்பா நம்ம எல்லாரும் சந்தோசமா இருப்போம்ப்பா என்று கூறினாள்... இதைக் கேட்ட முருகன் நெகிழ்ச்சியில் உறைந்து போனான். முருகன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கேடுத்து ஓடியது.கலாவோ மகளை கட்டியணைத்து முத்த மழை பொழிந்தாள்.. எங்க அப்பா தான் இந்த ஊர்லயே ரொம்ப நல்லவர் என் அப்பாக்கு நிகரா யாரும் இல்லை எனக்கு கிடைத்த அப்பா யாருக்கும் கிடைக்க மாட்டாங்க. என்று உரக்கச் சொன்னால்... அனைத்தும் கேட்ட முருகன் தன் செல்ல மகளைக் கண்டு செய்வதரியாது மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனான்... செல்ல மகளைக் கண்டு பெருமை கொண்டான்.

முற்றும்......

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...