You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palபூமி சாஸ்திரம் என்பது 1832 ஆம் ஆண்டு கனம் இரேனியசு ஐயரால் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூல் ஆகும். தமிழில் புவியியல் துறையில் வெளிவந்த முதல் நூல்களில் இதுவும் ஒன்று. இந்த நூலில் சமக்கிருதக் கலைச்சொற்கள் பரவலாக எடுத்தாளப்பட்டுள்ளன.
புவியின் மக்கள் வாழும் ஒவ்வொரு கண்டத்தின் புவியியல், நாடுகள், காலநிலை, மக்கள், உயிரின விபரங்கள் இந்த நூலில் குழந்தைகள் புரிந்து கொள்ளக்கூடிய தமிழில் எழுதப்பட்டுள்ளது. பின்னாளில் பரந்த பயன்பட்டுக்கு வந்த பல கலைச்சொற்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
பூமி சாஸ்திரம் நூலை ஆக்கியோன் நெல்லை அப்போஸ்தலர் கனம் ரேனியஸ் ஐயர் அவர்கள் 1832 ஆம் ஆண்டு பூமி முதலான சகல அண்டங்களையும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பாளையங்கோட்டையில் இருந்து 1832 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
மெய்யான தெய்வமாகிய பராபரனை அறிந்து கொள்ளவும் புத்தியை தெரிவிக்கிற மற்ற கல்விகளையும் போதிக்கும் படிக்கும் அறிவீனம் நீங்கும் படிக்கும் இந்த பூமி சாஸ்திரத்தினாலே உலகத்தில் உள்ளவைகளை அறிந்து கொள்ளவும் எழுதப்பட்டுள்ளது.
தமிழில் வெளிவந்த முதல் நூல் இந்த பூமி சாஸ்திர என்பது குறிப்பிடத்தக்கது.
இது நம்முடைய கைகளில் கிடைத்தது மிகப்பெரிய பொக்கிஷமாகும். இந்த காலத்து திருச்சபை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கால மொழி நடையில் திருநெல்வேலி கிறிஸ்தவ வரலாற்று சங்கம் இம்முயற்சியை எடுத்துள்ளது.
Rev .C.E.T. ரேனியஸ்
சார்லஸ் தியோபிலஸ் எவால்ட் ரெனியஸ் ஒரு ஜெர்மன் பிறந்த சர்ச் மிஷன் சொசைட்டியின் மிஷனரி ஆவார். இந்தியாவிற்கு வந்த முதல் CMS மிஷனரி இவரே. திருநெல்வேலி மாவட்டத்தில் அவர் செய்த மிஷனரி பணிக்காக "திருநெல்வேலியின் அப்போஸ்தலர்" என்று அழைக்கப்பட்டார்.
The items in your Cart will be deleted, click ok to proceed.