புதிதாக வாழ்க்கை பயணத்தை தொடங்கும் புதுமண தம்பதிகளுக்கு பாரபரனின் நாமத்தில் வாழ்த்துக்களையும், கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கத்தின் அன்பின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
“கல்யாணமாம் கல்யாணம்” இந்நூலில் திருநெல்வேலி ஜில்லாவில் மிஷனெரி வருகைக்கு பின்புதான் பெண் கல்வி அதிகரித்தது. சமூகம் மேம்பாடு அடைய பெண் கல்வி மிகவும் அவசியம் என்பதையும், பெண்களுக்கு தங்கள் உரிமைகளை பெறுவதற்கு கல்வி மட்டுமே ஆயுதம் என்பதையும் கடந்த காலங்களில் நடந்த வரலாற்று உண்மை சம்பங்களை தொகுத்து எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கிறிஸ்துவின் அன்பை ருசித்தார்கள், போராட்டங்களில் எப்படி பொறுமையுடன் குடும்பத்திலும், கிறிஸ்தவ மக்களிடமும், பிற மத மக்களிடமும் எப்படி கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தினார்கள் என்பதையும் இந்நூல் காட்டுகின்றது. திருநெல்வேலியில் நடைபெற்ற முதல் திருமணம், இங்கிலீஷ் கல்யாணம், பெண்கல்வி, இல்லத்தரசிகள் கணவனிடமும், பிள்ளைகளிடமும், குடும்பத்திலும், திருச்சபையிலும் எப்படிப்பட்ட விசுவாசத்தை காத்துக் கொண்டார்கள் என்பதையும், மேலும் இக்காலத்திற்கும் பொருத்தமானதாகவும், இன்றைய இளம் தலைமுறைகளுக்கு ஒரு சவாலையும் வைக்கின்றது. இந்த நூலின் செய்திகள் அனைத்தும் வரலாற்றுப் பேராசிரியர் தே. அ. கிறிஸ்துதாஸ் அவர்களின் படைப்புகளில் இருந்து தொகுக்கப்பட்டது.