சென்னையின் பெருமழை இரவில், ஏ.சி.பி வாசுதேவனின் உலகம் சிதறியது. தனது உயிரினும் மேலான மனைவி சுவாதியை கொடூரமாகப் பறிகொடுத்த வாசு, அந்த இழப்பிற்குக் காரணமானவனைத் தேடி ஒரு நீண்ட வேட்டையைத் தொடங்குகிறான். ஆனால், அவனது எதிரி சாதாரணமானவன் அல்ல. 'டீமன்' (Demon) என்று அழைக்கப்படும் அந்த முகம் தெரியாத எதிரி, தொழில்நுட்பத்தை ஆயுதமாகக் கொண்டவன். சிசிடிவி (CCTV) காட்சிகளையே தனக்கு ஏற்றார்போல் மாற்றியமைத்து, காவல்துறையினரையே திணறடிக்கும் வல்லமை படைத்தவன்.
இந்த இரண்டாம் பாகம், முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்தே தொடங்குகிறது. வாசுதேவன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு மர்ம நிழல் அவனை நோட்டமிடுவதோடு கதை மீண்டும் சூடுபிடிக்கிறது. டீமன் விரித்த வலை இன்னும் முடியவில்லை. முதல் பாகத்தில் 'ஸ்மார்ட் சிசிடிவி' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய டீமன், இம்முறை மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் வேறொரு நவீன தொழில்நுட்பத்தை (கேமிங் அல்லது செயலி) தனது கையில் எடுக்கிறான். பொழுதுபோக்காகத் தோன்றும் ஒரு தொழில்நுட்பம், எவ்வாறு மனிதர்களைத் தனது கைப்பாவைகளாக மாற்றி, அவர்களைக் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துகிறது என்பதே இந்த பாகத்தின் மையக்கரு.
இதே நேரத்தில், ராகுல் மற்றும் சமீரா என்ற இளம் ஜோடியின் வாழ்க்கையில் நடக்கும் விசித்திரமான சம்பவங்களும் இந்த மர்ம வலையோடு இணைகின்றன. வாசுதேவனால் டீமனை நெருங்க முடிந்ததா? தொழில்நுட்வத்தின் இருண்ட பக்கத்தைப் பயன்படுத்தி ஆட்டம் காட்டும் டீமனை, வாசு வீழ்த்தினானா? அல்லது டீமன் விரித்த இந்த 'Demon's Game'-ல் வாசுவும் ஒரு இரை ஆனானா?
தொழில்நுட்பக் குற்றங்கள், பழிவாங்கும் படலம் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்கிறது இந்த 'மர்ம வலை
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners