Share this book with your friends

Pearl In Shell / சிப்பிக்குள் முத்து

Author Name: Sis. Martha Lazar | Format: Paperback | Genre : Bibles | Other Details

வேத புத்தகம் என்பது தனி மனிதனுக்கு தேவன் அருளிய அவருடைய வார்த்தைகள், அல்லது அவரது உள்ளத்தின் விருப்பு வெறுப்புகள் என்று கூறலாம். பரிசுத்த வேதாகமத்தின் முதல் புத்தகம் ஆதியாகமம். நாம் வாழும் இந்த பூமி மற்றும் அதில் உள்ளவைகள், வானம் மற்றும் அதில் உள்ளவைகள், சமுத்திரம் மற்றும் அதில் உள்ளவைகள், வனம் (காடு) மற்றும் அதில் உள்ளவைகள் குறிப்பாக மனிதன் எவ்வாறு இறைவனால் படைக்கப்பட்டான் போன்ற யாவையும் குறித்த ஆரம்ப விவரம் / வெளிப்பாட்டை திரை விலக்கி எமக்கு அறிய தரும் புத்தகமாகும். காணப்படும், அனைத்து ஜீவ ராசிகள், மற்றும் எம் கண்களுக்கு புலப்படாத பல உயிருள்ள மற்றும் உயிரற்ற வைகளை குறித்த விவரணங்கள் யாவும் இந்த ஆதியாகம புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

மனிதன் தோன்றிய விதம், அவனது பணி, அவனது வீழ்ச்சி, அவனுக்கான மறுவாழ்வு திட்டம், அவனது பொறுப்புணர்வு, இறைவனின் ஏகாதிபத்தியம், நீதி, இரக்கம், பாவத்துக்கான பரிகாரம், பாவியின் அக மாற்றம், பாவத்துக்கான நியாய தீர்ப்பு, உலகில் மொழிகள் பிறந்த விவரணம், மனித நாகரீகங்கள் தோன்றிய காரியம், விசுவாசித்து கீழ்படிதல், கிருபையின் உடன்படிக்கை, போன்ற அனைத்துக்குமான தனது வேரினை (roots) இந்த "ஆரம்பங்களின் நூலாகிய" ஆதியாகம புத்தகத்தின் வாயிலாக மட்டுமே நாம் அறிய முடியும்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

திருமதி. மார்த்தா லாசர்

மும்பையில் பிறந்து வளர்ந்து, கடந்த 24 ஆண்டுகளாக (1999-2023) தமிழ்நாட்டில் வசித்து வரும் இப்புத்தகத்தின் ஆசிரியர் ஏற்கனவே 30 ஆண்டுகள் சிறுவர் ஊழியம், மற்றும் 21 ஆண்டுகளாக பெண்களுக்கு மாதமொருமுறை போதனா ஊழியத்திலும் சபை அமைப்பிற்குள்ளாக பயணித்தவர். தற்பொழுதும் தனது கணவர் போதகர் J. செல்லையா டேவிட் அவர்களோடு இணைந்து கடந்த 21 ஆண்டுகளாக New Jerusalem Church, KodaiRoad branch ல் குடும்பமாக ஊழிய பொறுப்பில் இருப்பவர். கிறிஸ்தவ உலகில் முனைவர். செ. ராஜசேகரன் ஐயா அவர்களின் "பேசும் புத்தகங்கள்" நிகழ்ச்சி, மற்றும் Rev. C. V. Abraham அவர்களின் 365 நாள் வேத வாசிப்பு திட்டத்தில் தனது பங்களிப்பை வழங்கி வருபவர். கர்த்தர் கொடுத்த கொடையாகிய இவரது எழுத்துக்கள் பல நூறுகளுக்கு ஆசீர்வாதமாக அமைந்துள்ளதால், இது இவரது முதலாவது புத்தக படைப்பு. வேதத்திற்கு நிகர் வேதமே, வேதாகமத்தை இவர் கருத்தூன்றி வாசிக்கையில் தியானித்த வசனங்களில் கிடைத்த முத்துவை அனுதின தியானமாக வெளி கொனர்ந்துள்ளார். இதிலுள்ள கருத்துக்கள் மூலம் கூடுதல் தெளிவை பெற்று, அவைகளை வாழ்வாக்கி கொள்ளுங்கள்.

Read More...

Achievements

+9 more
View All