"மன அழுத்தம்" வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ள இன்றைய சகாப்தத்தில், இதனை ஒழிப்பதற்கான வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக்க அவசியம். பல்வேறு நோய்களுக்கு மூல காரணம் மன அழுத்தமே. மன அழுத்தம் ஏற்படும் விதம் மற்றும் அதன் தாக்கம் மனித வளர்ச்சியின் நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும். இதை அந்தந்த நிலைகளில் அறிந்து கொள்வதன் மூலம், மற்ற நிலைகளில் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். இதனடிப்படையில், வாழ்க்கைத் தரத்திற்கு "அபூரணம்" எவ்வாறு இன்றியமையாதது என்பதையும், மன அழுத்தத்தின் முக்கிய ஆதாரமாக "பூரணம்" எவ்வாறு இருக்கிறது என்பதையும் நடைமுறை உதாரணங்களுடன் இந்தப் புத்தகம் விவரிக்கிறது. வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமுதாயம் மூலமாக ஒருவர் மன அழுத்தங்களை எதிர்கொள்ளும் போது இந்த புத்தகம் வாசகர்களுடன் பேசும் என்பதில் சந்தேகமில்லை. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை, அவர்களைச் சுற்றியுள்ள பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான உத்திகளை முன்னிலைப்படுத்தி, நோயற்ற வாழ்க்கையை வாழ இந்த புத்தகம் வழிகாட்டுகிறது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners