You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
10 Years of Celebrating Indie Authors
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஆன்மீகம் என்பது யாரோ சிலர் மட்டுமே பயணிக்க முடிந்த பாதை அல்ல யாரோ ஒரு சிலரால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய விஷயமும் அல்ல. மிக சிக்கலான தத்துவங்களும்,போதனைகளும் நிறைந்ததும் அல்ல. இந்தப் பிரபஞ்சமே ஓர் அற்புதம். அதன் சீரான இயக்கம்ஒரு பேரற்புதம். அதை நாம் புரிந்து கொண்டால் இங்கு ஏதோ ஒரு சக்தி அல்லது தன்மைஇதற்கெல்லாம் காரணமாக உள்ளது என்பது புரிந்துவிடும். எனில் இந்தக் குறுகிய வாழ்க்கைக்குப் பிறகு நாம் நிரந்தரமான ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம்வந்து விட்டால் அதுவே ஆன்மீகம். அதற்கு நிலையற்ற விஷயங்கள் மீது நாம் வைத்திருக்கும் பற்றுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டால் அவற்றிலிருந்து விடுபடுவது மிகவும் சுலபம் .அதற்கு நமக்குள் ஒரு நேர்மை வேண்டும்.தெளிவு வேண்டும். மனதில் தூய்மை வேண்டும். விடாமுயற்சி வேண்டும் .அவ்வளவே… இவற்றைக் கொண்டு குருவின் அருளைப் பெற வேண்டும்.. இதுஅனைவருக்கும் சாத்தியமே.
டாக்டர். தா. பாமா பொன்மணி
திருமதி.பாமா பொன்மணி ஒரு மருத்துவர். இளம் வயதிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர். ஆன்மிகம் தவிர சமூக நலன் குறித்த அக்கறை கொண்டவர். ஜாதி, மதம், மொழி கடந்து இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரின் ஆனந்தம், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி இவை சார்ந்தே நமது நோக்கமும், செயலும் இருக்கவேண்டும் என்பதே இவரின் ஆழமான கருத்து. ஆன்மீக வாழ்வாக இருப்பினும் அல்லது உலகியல் வாழ்வாயினும் ஒருவர் அனுபவம் மூலம் கற்க்கும் விஷயங்களே வாழ்வில் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகிறார். புத்தகம் எழுதுதல், சமூக சேவை மற்றும் மருத்துவ தொழிலின் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் இவற்றில் ஆர்வமுடையவர்.
The items in your Cart will be deleted, click ok to proceed.