You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal"மன அழுத்தம்" வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ள இன்றைய சகாப்தத்தில், இதனை ஒழிப்பதற்கான வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக்க அவசியம். பல்வேறு நோய்களுக்கு மூல காரணம் மன அழுத்தமே. மன அழுத்தம் ஏற்படும் விதம் மற்றும் அதன் தாக்கம் மனித வளர்ச்சியின் நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும். இதை அந்தந்த நிலைகளில் அறிந்து கொள்வதன் மூலம், மற்ற நிலைகளில் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். இதனடிப்படையில், வாழ்க்கைத் தரத்திற்கு "அபூரணம்" எவ்வாறு இன்றியமையாதது என்பதையும், மன அழுத்தத்தின் முக்கிய ஆதாரமாக "பூரணம்" எவ்வாறு இருக்கிறது என்பதையும் நடைமுறை உதாரணங்களுடன் இந்தப் புத்தகம் விவரிக்கிறது. வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமுதாயம் மூலமாக ஒருவர் மன அழுத்தங்களை எதிர்கொள்ளும் போது இந்த புத்தகம் வாசகர்களுடன் பேசும் என்பதில் சந்தேகமில்லை. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை, அவர்களைச் சுற்றியுள்ள பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான உத்திகளை முன்னிலைப்படுத்தி, நோயற்ற வாழ்க்கையை வாழ இந்த புத்தகம் வழிகாட்டுகிறது.
டாக்டர். அ. ராபர்ட் சாம்
டாக்டர். அ. ராபர்ட் சாம், ஒரு விஞ்ஞானி மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளர். தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் சூரங்குழியில் பிறந்தார். தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமானவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் நேனோ தொழில்நுட்பத்தில் (Nanotechnology) முனைவர் பட்டம் பெற்றவர். வாழ்க்கை, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அவரது எழுத்து அனைத்து வயது வாசகர்களையும் தொடுகிறது. 'சீரான வாழ்க்கை, சீர்குலைக்கும் மன அழுத்தம்' 'பெர்ஸ்பெக்டிவ்ஸ் ஆப் இம்பெர்பக்சன்' (Perspectives of imperfection) என்று தொடங்கி, 'வாழ்க்கையில் துளிகளும் அலைகளும்’ ( Drops and ripples in life '), இ-மரியாதை' (e-respect) என்று நகர்கிறார். மக்கள் தங்கள் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் எதிர்கொள்ளும் இழப்புகள், மனஅழுத்தங்கள் மற்றும் இந்த அழுத்தங்களை சமாளிப்பதற்கான எளிதான நுட்பங்களை அவர் விரிவாக கோடிட்டுக் காட்டுகிறார். அவர் புத்தகங்களை எழுதாதபோது, அவர் தனது பெரும்பாலான நேரத்தை சமையல், தோட்டக்கலை, நடைபயிற்சி மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனையில் ஈடுபடுகிறார்.
The items in your Cart will be deleted, click ok to proceed.