You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஒரு பெண் மணவாழ்க்கையில் வெற்றி பெறுவது இன்று எளிதானதாக இல்லை.கணவன் தொழிலில் நஷ்டப்பட்டால் அவள் வறுமையில் வாட வேண்டியுள்ளது. வயதான காலத்தில் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக தன் படிப்பு, வேலை, அந்தஸ்துக்கு பொருத்தமற்ற மணமகனை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் மணவாழ்வு பெரும்பாலும் இனிமையானதாக அமைவதில்லை.சில பெண்களுக்கு நல்ல கணவன் அமைந்தும் விபத்தில் சிக்கி இளம் வயதில் விதவையாகி விடுகிறார்கள். சில பெண்களுக்கு திருமணமாகியும் வயது முப்பதைத் தாண்டியும் குழந்தைப்பேறு இல்லாமல் தவிக்கிறார்கள்
சில பெண்களுக்கு அமையும் கணவன் ஊதாரியாக, அவளது நடத்தையில் சந்தேகப்படுபவனாக, சோம்பேறியாக, பிறரை ஏமாற்றி பணம் பறிப்பவனாக, மனைவியை அடித்து துன்புறுத்துபவனாக அமைந்து விடுவதும் உண்டு. சில பெண்களுக்கு கணவன் குடிப்பழக்கம், புகைப்பழக்கம், போதைப்பழக்கம் உடையவனாக அமைந்து விடுவதும் உண்டு. சில பெண்கள் கணவனால் கைவிடப்படுகிறார்கள். சில பெண்களுக்கு கணவன் துர்நடத்தையுடையவனாக, ஒழுக்கமில்லாத, பிறர்மனை நாடக்கூடியவனாக கணவன் அமைந்து விடுவதும் உண்டு.
சில பெண்கள் நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து மனவளர்ச்சியில்லாத குழந்தையை பெற்று தவிக்கிறார்கள். இவ்வளவையும் தாண்டி ஒரு பெண் தனது அலுவலக வாழ்விலும், மணவாழ்விலும் வெற்றி பெறுகிறாள் என்றல் அவள் உண்மையிலேயே சிங்கப்பெண்தான்.
மாபெரும் வெற்றி பெற்ற 25 சிங்கப் பெண்களை இந்த புத்தகத்தில் வரிசைப்படுத்தியுள்ளேன். இன்று பெண்கள் சந்திக்கும் ஏராளமான பிரச்னைகளையும் அதற்க்கான தீர்வுகளையும் இந்த புத்தகத்தில் விளக்கியுள்ளேன். பெண்கள் விழிப்புணர்வு பெறவும், வீட்டுக்கு ஓரு சிங்கப்பெண் உருவாகவும், வருடந்தோறும் மகளிர் தினம் மகிழ்வுடன் கொண்டாடவும்
வாழ்த்துக்கள்.
சுவாமிநாதன்
ஏன் தாயார் உன்னதமானவர். என் சகோதரிகள் உயர்வானவர்கள். என் மனைவி மேண்மையானவர். என் உறவுப் பெண்கள் ஒப்பற்றவர்கள் , என் அலுவலக தோழிகள் சிறப்பானவர்கள். என் வாழ்வில் நான் உயர்வடைய எனக்கு வழிகாட்டியவர்கள் பெண்கள்தான். இக்கட்டான சூழ்நிலைகளில் எனக்கு கருணை காட்டியவர்கள் பெண்கள்தான். எனக்கு கலங்கரை விளக்கமாய் இருந்தவர்கள் பெண்கள்தான்.என் தவறுகளை அதிகம் தட்டிக்கேட்டவர்கள் பெண்கள்தான்.வார்த்தைகளால் என்னை உலுக்கியவர்கள் பெண்கள்தான்.என்னை செம்மைப்படுத்திய பெண்களுக்கு நான் என்றும் கடன்பட்டிருக்கிறேன். அதற்கு நன்றிக்கடனாய். இந்த புத்தகத்தை அவர்களுக்கு மகளிர் தின பரிசாக அர்ப்பணிக்கிறேன்.
The items in your Cart will be deleted, click ok to proceed.