Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஅழகர்சாமி சக்திவேல், தமிழ்நாடு, திண்டுக்கல்லில் பிறந்து, சிங்கப்பூர் குடிமகன் ஆனவர். காரைக்குடி, அழகப்பச்செட்டியார் அரசு பொறியியற் கல்லூரியில், மின்னியல் பொறியியல் பிரிவில், இளங்கலை பட்டம் பெற்று, பத்து வருடம், தமRead More...
அழகர்சாமி சக்திவேல், தமிழ்நாடு, திண்டுக்கல்லில் பிறந்து, சிங்கப்பூர் குடிமகன் ஆனவர். காரைக்குடி, அழகப்பச்செட்டியார் அரசு பொறியியற் கல்லூரியில், மின்னியல் பொறியியல் பிரிவில், இளங்கலை பட்டம் பெற்று, பத்து வருடம், தமிழ்நாடு மின்வாரியத்தில், பொறியாளராகப் பணி புரிந்தவர். அதன்பின், சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக்கழகத்தில், கணினிசார் உற்பத்திப் பொறியியலில், முதுகலைப் பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில், கணினிப்பயன்பாட்டு அறிவியியலிலும் ஒரு முதுகலைப்பட்டம் பெற்றவர். மூன்றாம் பாலினத்துக்குப் பயன்படும் வகையில், இலக்கிய சமூக சேவை செய்யும் அழகர்சாமிசக்திவேல், சிங்கப்பூர் கணினித்துறையில், இன்றும் உழைக்கும் ஒரு உழைப்பாளி.
Read Less...Achievements
ஓரினச்சேர்க்கை வாழ்க்கை வாழ்பவர்கள், பாவிகள் என்றே, மதங்கள், மனிதனுக்குப் போதிக்கின்றன. மதங்களின் அடியை, அப்படியே பின்பற்றும் சமூகம், மூன்றாம் பாலின மக்கள் வாழ, எவ்வளவோ தட
ஓரினச்சேர்க்கை வாழ்க்கை வாழ்பவர்கள், பாவிகள் என்றே, மதங்கள், மனிதனுக்குப் போதிக்கின்றன. மதங்களின் அடியை, அப்படியே பின்பற்றும் சமூகம், மூன்றாம் பாலின மக்கள் வாழ, எவ்வளவோ தடைகளை விதித்து இருக்கிறது. தான் வாழும் சமூகத்தின் அங்கீகாரம் பெற, ஒரு சின்ன ஊசி துவாரத்துக்குள்நுழையும் ஒட்டகங்களாய், அர்த்தநாரிகள், உலகமெங்கும் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அப்பேர்ப்பட்டவர்களின் கடின வாழ்க்கையை, பலசிறுகதைகள் மூலம் சொல்லவரும் புத்தகமே, சிங்கப்பூர் அழகர்சாமி சக்திவேலின், இந்த மூன்றாம்பாலின இலக்கியப் புத்தகம் ஆகும்.
சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக, ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில், பின்னிப்பிணைந்து வாழும் மூன்றாம் பாலினம், தம் வாழ்க்கையில்அனுபவிக்கும், இன்ப துன்பங்களைப் பேசும், இந்த சிங்கப்பூர் மூன்றாம் பாலினச் சிறுகதைகள், சிங்கப்பூருக்கு மட்டுமல்ல, உலகின் எல்லா இடங்களில்வாழும், தமிழர் வாழ்க்கைக்கும் பொருந்தும். மூன்றாம் பாலின இலக்கியத்துக்கென, ஒரு தனித்துவம் இருக்கிறது என்பதை, சிங்கப்பூர் அழகர்சாமியின் இந்தப்புத்தகம், ஆணித்தரமாகச் சொல்ல நினைப்பது, இந்தப் புத்தகத்தின் இன்னொரு சிறப்பு ஆகும். இந்தப் புத்தகம், மூன்றாம் பாலினத்துக்காக மட்டுமல்ல, கூடவே, மூன்றாம் பாலினத்துக்கு ஆதரவு தரும், அனைத்து ஆண், பெண் தமிழர்களுக்காகவும் எழுதப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பு ஆகும்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.