ஓரினச்சேர்க்கை வாழ்க்கை வாழ்பவர்கள், பாவிகள் என்றே, மதங்கள், மனிதனுக்குப் போதிக்கின்றன. மதங்களின் அடியை, அப்படியே பின்பற்றும் சமூகம், மூன்றாம் பாலின மக்கள் வாழ, எவ்வளவோ தட
ஓரினச்சேர்க்கை வாழ்க்கை வாழ்பவர்கள், பாவிகள் என்றே, மதங்கள், மனிதனுக்குப் போதிக்கின்றன. மதங்களின் அடியை, அப்படியே பின்பற்றும் சமூகம், மூன்றாம் பாலின மக்கள் வாழ, எவ்வளவோ தடைகளை விதித்து இருக்கிறது. தான் வாழும் சமூகத்தின் அங்கீகாரம் பெற, ஒரு சின்ன ஊசி துவாரத்துக்குள்நுழையும் ஒட்டகங்களாய், அர்த்தநாரிகள், உலகமெங்கும் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அப்பேர்ப்பட்டவர்களின் கடின வாழ்க்கையை, பலசிறுகதைகள் மூலம் சொல்லவரும் புத்தகமே, சிங்கப்பூர் அழகர்சாமி சக்திவேலின், இந்த மூன்றாம்பாலின இலக்கியப் புத்தகம் ஆகும்.
சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக, ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில், பின்னிப்பிணைந்து வாழும் மூன்றாம் பாலினம், தம் வாழ்க்கையில்அனுபவிக்கும், இன்ப துன்பங்களைப் பேசும், இந்த சிங்கப்பூர் மூன்றாம் பாலினச் சிறுகதைகள், சிங்கப்பூருக்கு மட்டுமல்ல, உலகின் எல்லா இடங்களில்வாழும், தமிழர் வாழ்க்கைக்கும் பொருந்தும். மூன்றாம் பாலின இலக்கியத்துக்கென, ஒரு தனித்துவம் இருக்கிறது என்பதை, சிங்கப்பூர் அழகர்சாமியின் இந்தப்புத்தகம், ஆணித்தரமாகச் சொல்ல நினைப்பது, இந்தப் புத்தகத்தின் இன்னொரு சிறப்பு ஆகும். இந்தப் புத்தகம், மூன்றாம் பாலினத்துக்காக மட்டுமல்ல, கூடவே, மூன்றாம் பாலினத்துக்கு ஆதரவு தரும், அனைத்து ஆண், பெண் தமிழர்களுக்காகவும் எழுதப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பு ஆகும்.