You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஅழிவிலா, வாழ்வியல் தத்துவங்கள் அடங்கிய கருவூலங்கள் தான் உபநிடதங்கள். ஆதி அந்தமிலா பரம்பொருளை அறிய வழிவகுக்கும் பல்கலைக்கழகங்கள் அவை. அனைத்தும் ஈசனின் உறைவிடமே என்று தொடங்கும் முதல் மந்திரத்தால், ஈசாவாஸ்ய உபநிடதம் என்று பெயர் பெற்ற இந்த உபநிடதத்தின் தமிழாக்கமே இந்நூல்.
18 மந்திரங்களைக் கொண்ட இந்த உபநிடதம் பரம்பொருளான இறைவனின் (பிரம்மன் அல்லது பரபிரம்மன்) நீக்கமற நிறை தன்மையை அற்புதமாக விளக்குகிறது. பொறிபுலன் வழி வரும் சிற்றின்பங்களின் நிலையாமை, மெய்யறிவு காண துறவின் அவசியம் போன்ற விஷயங்களைப் பற்றி பேசுகிறது. அறம் வலியுறுத்தல், கர்ம யோகாவின் வாழ்க்கை சார்ந்த அணுகுமுறை, வாழ்க்கைப் பாதையில் அறிவு மற்றும் கர்மா என இரண்டும் கலந்த சமநிலை கொள்கைகளை கடைப்பிடித்தல், அதனால் வரும் நன்மைகள் பற்றிய வழிகாட்டுதல்கள் முதலிய ஆழமான உட்கருத்துகளை கோடிட்டுக் காட்டுகின்றது.
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.பொன். எழிலரசன்
நாற்பது வருடங்கள் இந்திய விமான தொழிற்சாலைதனில், பல்வேறு பதவிகளில் பணிபுரிந்து, உலக நாடுகள் பல கண்டு, உயர்மேலதிகாரியாக பதவி ஓய்விற்குப்பின், ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டு, சமஸ்க்ருத மொழி பயின்று, இந்து தர்மம் உரைத்திடும் ஆன்மீக மந்திரங்களை, தமிழில் எளிய நடையில் எழுத முயலும், எழுபதை எட்டும் சிறுவன் யான்.
ஆன்மீகத்தில், வேதாந்தம் என்பது நமது முனிஞானியர் ஆழ்ந்து தியானித்து, அனுபவித்து அந்த அனுபவத்தால் அறிந்த தத்துவங்களை (யாண்டும் உள்ள உண்மைகளை) தமது சீடருக்கு உபதேசம் செய்தது.
பாமரன் என்ற சொல்லுக்கு அறிவிலன் என்ற பொருள் உண்டு. வேதாந்த அறிவில், நான் ஒரு பாமரன். ஆன்மீகப் பயணத்தில், தவழும் பருவத்தை தாண்டி, நடக்க முயலும் ஒரு குழந்தை.
நான் அறிந்த வேதாந்தம், அடர்ந்த வனத்தினுள், ஓலைக்குடிலினுள் அல்ல. வளமிகு நம் கிராமங்களிலும், சிமென்ட்டுக் கலவைக் காடுகளெனும் நமது நகரங்களிலும் இடைவிடாது உழைத்து கர்ம யோகிகளாய் வாழ்ந்த எனது தாய், தந்தையரின் வாழ்க்கை.
மழலை நிலையில் நான் புரிந்து கொண்ட சில கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன்.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.