உரிமையில் சார்ந்த பிரச்சனைகளை காவல் நிலையங்களில் விசாரணை செய்யக்கூடாது என்கிற பல்வேறு உத்தரவுகள் மாண்பமை உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களால் சிலவேறு காலகட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள், அதனை சார்ந்த தீர்ப்புகள் என்பது சட்டமாக கடைப்பிடித்தே ஆக வேண்டும் என்பதும் சட்ட விதியாகும். இதைப் போலவே தான் அரசாணைகள் (Government Orders) சுற்றறிக்கைகள், போன்றவையும் கடைப்பிடிக்கப் பட வேண்டும். ஆனால், சுற்றறிக்கைகள் GO போன்றவை காலத்திற்கு ஏற்ப மாறுதல்களுக்கு உட்படும். ஆனால், நீதிமன்ற உத்தரவுகள், சட்டங்கள் அரிதிலும் அரிதாகவே மாறுதல்களுக்கு உட்படக்கூடியதாகும். எனவே, சட்டத்தை நிறைவேற்றக்கூடிய பணியிலிருக்கும் அதிகாரிகள் சட்ட மீறலில் ஈடுபடுவதும், தவறான முன்னுதாரணமாகும். எனவே, சிவில் சார்ந்த பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு சார்ந்த அனைத்து தரப்பினருக்குமான இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது.