Share this book with your friends

KAI SERNTHA KAVITHAI... / கை சேர்ந்த கவிதை...

Author Name: Nandhini Sugumaran. | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

நாயகன் : சிவபரதன்.
நாயகி : சுவாதி.

மாமன் மகளின் அழகினால் ஈர்க்கப்பட்டு திருமணம் செய்ய நினைக்கும் நாயகன், பின் அவளது மன எண்ணங்கள் பிடித்தம் இல்லாது விலகுகிறான். தமையனின் மீது கொண்ட அன்பினால், அவரது மகளை தனக்கு மருமகளாக்க விரும்பும் நாயகனின் தாய். தாய்க்கும் மகனுக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடினால் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

சிறுவயதிலேயே பெற்றவர்களை இழந்து விட்டு தாத்தாவின் அரவணைப்பில் வளரும் நாயகி. தன் பெரியம்மாவிடம் தாயன்பை தேட, அவரோ அவளின் மனதை நோகடிக்கிறார். 

நாயகனும் நாயகியும் எதிர்பாராமல் சந்தித்து கொள்ளும் தருணம், இருவருக்கு இடையிலும் ஏற்படும் நட்பும் புரிதலும் காதலுமாய் நகரும் நாட்கள். நாயகன் தன் வீட்டிற்கு மீண்டும் சென்றானா?. நாயகிக்கு அவள் வேண்டும் அன்பு கிடைத்ததா?. நாயகனின் மாமன் மகள் யார், அவளின் நிலை.. என்பதை கதையில் சொல்லியிருக்கிறேன்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

நந்தினி சுகுமாரன்.

வணக்கம் தோழமைகளே..

    நான் நந்தினி, இல்லத்தரசி. நேரம் கடத்துவதற்காக கதைகளை வாசிக்க துவங்கி, அதில் ஆர்வம் ஏற்பட்டது. பின் அதுவே என் முழுநேர சுவாசமாகி போனது. பல எழுத்தாளர்களின் கதைகளை தேடி தேடி படித்து, தமிழையும் அதன் சுவையையும் உணர்ந்து கொண்டேன். வாசித்த கதைகளின் தாக்கத்தால் எனக்குள்ளும் கற்பனைகள் வளர துவங்கின. அதை வெளிப்படுத்தும் வழியறியாது ஆண்டுகள் கடந்து விட, தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது கற்பனை நிழல்களுக்கு, பெயர் அடையாளம் உணர்வுகள் உருவம் கொடுத்து.. கதையின் மூலமாம் நடமாட விட்டுள்ளேன். உங்களுக்கும் இந்த நிழல் உருவங்கள் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

என்றும் உங்கள்..
நந்தினி சுகுமாரன்.

Read More...

Achievements

+6 more
View All