Share this book with your friends

Kathirukiren Manvizhye!... / காத்திருக்கிறேன் மான்விழியே!...

Author Name: Nandhini Sugumaran | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

காத்திருக்கிறேன் மான்விழியே..

எனது முதல் கதை, முதல் எழுத்து.

தன் முதல் காதலை தவறவிட்ட நாயகனும் ஒரு குழந்தைக்கு தாயான நாயகியும் இணைவதே கதை.
நாயகனின் கல்லூரி காதல் தோல்வியில் முடிய, அதிலிருந்து மீண்டு பெங்களூர் சென்று தன் மேற்படிப்பை தொடர்கிறான். சுயமுயற்சியினால் தன் தரத்தை உயர்த்தி கொள்ளும் நாயகன், ஒரு நிறுவனத்தின் பொறுப்பை ஏற்று கோவை வரும் போது, நாயகியை சந்திக்கிறான். அங்கு தன் தந்தையின் இறப்பிற்குப் பின் தம்பி தங்கைகளின் எதிர்காலத்திற்கு பொறுப்பேற்று, தன் குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி வாழ்கிறாள் நாயகி. இவர்கள் இருவரும் வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பதை கதையில் கூறியிருக்கிறேன்..

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

நந்தினி சுகுமாரன்

வணக்கம் தோழமைகளே..

    நான் நந்தினி, இல்லத்தரசி. நேரம் கடத்துவதற்காக கதைகளை வாசிக்க துவங்கி, அதில் ஆர்வம் ஏற்பட்டது. பின் அதுவே என் முழுநேர சுவாசமாகி போனது. பல எழுத்தாளர்களின் கதைகளை தேடி தேடி படித்து, தமிழையும் அதன் சுவையையும் உணர்ந்து கொண்டேன். வாசித்த கதைகளின் தாக்கத்தால் எனக்குள்ளும் கற்பனைகள் வளர துவங்கின. அதை வெளிப்படுத்தும் வழியறியாது ஆண்டுகள் கடந்து விட, தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது கற்பனை உருவங்களுக்கு, பெயர் அடையாளம் உணர்வுகள் கொடுத்து.. கதையின் மூலமாம் நடமாட விட்டுள்ளேன். உங்களுக்கும் இந்த நிழல் உருவங்கள் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

என்றும் உங்கள்..
நந்தினி சுகுமாரன்.

Read More...

Achievements

+6 more
View All