நான் ராதா குமார். இல்லத்தரசி. சின்ன வயதிலிருந்தே எனக்கு வாசிப்பது மிகவும் பிடிக்கும். சிறு வயதில் அம்புலிமாமா, பாலமித்ரா, ராணி காமிக்ஸ் என தொடங்கிய எனது வாசிப்பு ரமணிச்சந்திரன், ராஜேஷ்குமார், சிவசங்கரி, பாலகுமாரன், கல்கி, அகிலன், ஜெயகாந்தன், ஜெயமோகன், சுஜாதா... இப்படி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வாசிக்க பிடித்ததால் ஒரு கட்டத்தில் எழுதவும் தோன்றியது. மனதில் உள்ளவைகளை வார்த்தைகளால் கோர்த்து எழுதி பார்க்கும் போது வரும் சுகமே அலாதிதான். அந்த போதையில்தான் என் பதின் பருவத்தில் இருந்தே எழுத ஆரம்பித்தேன். ஆனால் என் வீட்டு காகிதங்களுக்கு மட்டுமே அறிந்த என் எழுத்தை முதன் முதலாக உங்கள் முன் எடுத்து வருகிறேன். இது பிரசுரத்திற்கான எனது முதல் நாவல். படித்து உங்க கருத்துக்களை சொல்லுங்கள்.
நன்றி.
ராதா குமார்
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners