நொடிகள் சற்று சிந்திக்கையிலே பல எண்ணங்கள்; பல்வேறு கோணங்களில் நம் கண் முன்னும், நம் கற்பனையிலும். அதை எழுத்துக்களாய் மாற்ற ஆரம்பித்தேன் ஓர் நாள். செல்லும் பாதையெங்கும் சிரிப்பைக் கொடுக்கும் சந்தோஷமும், அன்பைப் புரிய வைக்கும் அனுபவங்களும், கண்மூடித் தனமான கோபமும், சிதற வைக்கும் சண்டைகளும், நோகடிக்கும் நோய்களும், நம்பிக்கை கொடுக்கும் பேச்சுகளும் நம்மை சற்று யோசிக்க வைக்கும் இவை அனைத்தும் எதற்கு என்பதை..
மெல்ல அடி எடுத்து வைத்தாலும் வேகமாக ஓடினாலும் நடப்பவையோ நிற்காது, நடக்கப்போவதோ வராமல் செல்லாது. அத்தகு சூழலில் சிந்திப்பவை அனைத்தும் உங்களுங்காக என் வார்த்தைகளால், உங்களிடம் என்றும் வாழ்ந்திடவே; சில பல சிந்தனைகளோடு சிறகுகள் விரிக்கின்றேன்...