இயற்கைப் பிரமாணம், வேதப்பிரமாணாமாகிய இரண்டும் ஒன்றுபோல் தேவன்பைக் காட்டுகின்றன. பரலோகத்திலிருக்கிற நமது பிதாவானவரே ஜீவன், ஞானம், சந்தோஷமாகிய இவைகளுக்கு மூலகர்த்தா. பிரகிருதியைச் சேர்ந்த வியப்பும் சிறப்பு மிகுந்த பொருட்களைப் பாருங்கள் மனிதருக்கு மாத்திரமல்ல, ஜீவப்பிராணிகளின் அவசியத்திற்கும், சௌக்கியத்திற்கும், இன்பத்திற்கும் ஏற்றபடி அவைகள் அமைந்திருப்பதைச் சற்றுக் கவனியுங்கள். பூமியை உயிர்ப்பித்துச் செழிப்பாக்குகிற சூரியவொளியும் மழையும், குன்றுகளும் மலைகளும், கடல்களும் சமுத்திரங்களும், வெளிகளும் மைதானங்களும், இவைகளிலுள்ள யாவும் தேவன்பை நமக்குத் தெரிவிக்கின்றன.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners