Share this book with your friends

SU. SAMUTHTHIRAM'S SHORT STORIES / சிக்கிமுக்கிக் கற்கள் சிறுகதைகள்

Author Name: Tamizhdesan Imayakappiyan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

1. சிக்கிமுக்கிக் கற்கள்
2. ஒரு சத்தியத்தின் அழுகை
3. தராசு
4. ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்
5. தலைப்பாகை
6. ஆகாயமும் பூமியுமாய் 
7. குற்றம் பார்க்கின்
ஆகிய 7 சிறுகதை நூல்களின் தொகுப்பு.

முற்போக்கு எழுத்தாளர்களில் சிறந்த ஒருவர் சு.சமுத்திரம்! கருத்தரங்கு ஒன்றில் அறிமுகமாகி உடன்பிறவா உற்ற உறவானவர்! அவருடைய படைப்புகள் அனைத்தையும் திறனாய்ந்து 300 பக்க அளவில் எழுதிய நூல்வரைவை நியூ செஞ்சுரி பதிப்பகத்துக்கு அனுப்பினேன்.அதை நூலாக்கும் தகுதி உடையது என அப்பதிப்பகத்தின் நூல் தேர்வுக்குழு ( வல்லிக்கண்ணன்) பரிந்துரைத்தது.
அப்போது பதிப்பகத்துக்கும் சு சமுத்திரத்துக்கும் ஏதோ கருத்து வேறுபாடு . அதனால் நூல் வரைவை அவர்களிடமிருந்து வாங்கி வந்து மதுரையில் என் இல்லம் வந்து கொடுத்துத் தானே தம் ஏகலைவன் பதிப்பகம் வாயிலாக வெளியிடப் போவதாகப்பெற்றுச் சென்றார்.! அப்போதைய அவரது பண நெருக்கடியால் அதை 150 பக்கங்களாகச் சுருக்கி "சு. சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம்" என்ற தலைப்பில் வெளியிட்டு" ராயல்டியும் " அனுப்பினார். மகளிர், தொழிலாளர், தாழ்த்தப்பட்டமக்கள் எனும் 3 பிரிவாகச் சமுதாய மாற்றங்கள், மேம்பாடு/ முன்னேற்றம்,மாற்றம்/ சமநிலை என்ற வகையில் முந்தைய ஆய்வின் தொடர்ச்சியாகவே தொகுக்கப் பட்டுள்ளன. வாடாமல்லி அவரது சிறந்த புதினம்! அன்றைய நாளில் அவருடைய சிறுகதைகளில் காணப்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பு அவரைச் சிறுகதை இயக்கமாகவே கருத வைத்தது . படைப்புகளில் கோவை. ஞானி, நான் சுட்டிக் காட்டிய குறைகளை ஏற்றுக் கொண்டு இனி அவற்றைக் களைவேன் எனப் பண்புடன் கூறிய பெருந்தன்மை போற்றத் தக்க ஒன்று!

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்

சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். அவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன அவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் ஒரு சோஷியலிசவாதி. அவரது படைப்புகளில் சோஷியலிசக் கருத்துக்கள் பரவியிருந்தது. அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக்களமாக அமைந்தன. 1990ல் அவரது புதினம் வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது பெற்றது. 2003ல் சென்னையில் அவர் ஒரு விபத்தில் காலமானார்.

விருதுகள்
சாகித்திய அகாதமி விருது -1990.
தமிழ் அன்னை பரிசு - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திடமிருந்து.
இலக்கியச் சிந்தனை - சிறுகதைப் பரிசு.
கலைஞர் விருது - முரசொலி அறக்கட்டளையிடமிருந்து. (மறைவுக்குப்பின்)
எழுதிய புத்தகங்கள்
(முழுமையானது)

ஊருக்குள் ஒரு புரட்சி
ஒரு கோட்டுக்கு வெளியே
கடித உறவுகள்
மண் சுமை
தாய்மைக்கு வறட்சி இல்லை
வெளிச்சத்தை நோக்கி
வளர்ப்பு மகள்
சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்
தராசு
சத்திய ஆவேசம்
இல்லந்தோறும் இதயங்கள்
சோற்றூ பட்டாளம்
பூ நாகம்
மூட்டம்
சாமியாடிகள்

Read More...

Achievements

+16 more
View All