வணக்கம், இது எனது பத்தாம் நாவல். புது கோணத்தில் காதலை பற்றிய கதை, சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எனது புனைவும் சேர்ந்து முழு நாவல் ஆகி உள்ளது. இடையில் கவிதைகளின் தலைவன் பாரதியின் கவி வரிகள். கவி வரிகள் அத்தனையும் கதைக்கு பொருந்தும் வகையில் அமைத்து உள்ளேன். காதலும் அன்பும் தான் எப்போதும் என் கதை கரு, அதை எதார்த்ததுடன் எடுத்து கூறி உள்ளேன். வாசித்து பாருங்கள் நிச்சயம் பிடிக்கும்.
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றி,
கௌரி முத்துகிருஷ்ணன்.
வணக்கம், நான் எழுத்தாளினி கௌரி முத்துகிருஷ்ணன். நான் ஒரு மணிச்சட்ட ஆசிரியை, கிராஃபிக் கலைஞர் மற்றும் இல்லத்தரசி. கதைகள் வாசிப்பது என்பது எனது முக்கிய பொழுதுபோக்கு, எழுத்தின் மீது கொஞ்சம் ஆசை. அந்த ஆசையின் விளைவுகள் தான், என்னை எழுத வைத்தது. அன்பும் காதலும் தான் என் கதைகளின் மையக்கருத்து. என் கதைகள் உங்களுக்கும் பிடிக்கும். ஒரு முறை வாசித்துப்பாருங்கள்.
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றி,
கௌரி முத்துகிருஷ்ணன்.
உங்களின் கருத்துக்களை தெரிவிக்க: gowrimuthukrishnan@gmail.com