ஒரு பட்டணத்திலோ அல்லது நகரத்திலோ ஒரு வாஞ்சை எழும்பும்போது, அவ்வாஞ்சை பேணி வளர்க்கப்பட வேண்டும். துன்மார்க்க இருளின் மத்தியில் ஒரு தீபமாவும், தேவனுடைய ஓய்வுநாளுக்கு ஒரு ஞாபக சின்னமாகவும், தொழுது கொள்வதற்கென ஒரு தாழ்மையான ஆராதனை ஸ்தலம் அங்கு ஓர் அடையாளமாக நிலை நாட்டப்படுமளவும், அவ்விடங்களில் தீர்க்கமாக வேலை செய்யப்பட வேண்டும். இப்படிப்பட்ட ஞாபக சின்னங்கள், சத்தியத்துக்குச் சாட்சிகளாக அநேக இடங்களில் நிற்க வேண்டும். 6T. 100. CCh 209.2