திப்பிலி என்பது மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இந்தச் செடியிலிருந்து கிடைக்கும் மிளகு கொல்கத்தாவிலிருந்து ஏற்றுமதியாகிறது.
கொடிவகையைச் சார்ந்த திப்பிலி ஒரு நீண்ட காலப்பயிராகும்.
திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டுவர இருமல், தொண்டை கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்
ஆஸ்துமா, சளி, இருமல், சுவாசிக்க சிரமப்படுதல் போன்ற பல சுவாச பிரச்சனைகளுக்கு திப்பிலி தீர்வாக அமையும். திப்பிலி உடல் உஷ்ணத்தை அதிகமாக்கும் இதனால் பித்தத்தை பலப்படுத்தி வாதம் மற்றும் கபத்தை குறைக்கும். இதனாலேயே இதனை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners