குற்றம் நடைபெற்றால் நடவடிக்கை எடுப்பதென்பது மட்டுமே காவல்துறையின் பணியல்ல. மேலும், குற்றங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்வதென்பதும் கூட காவல்துறையின் பிரதான பணிதான். காவல்துறை மட்டுமல்ல, குற்றம் நடைபெறாமல் தடுக்கும் பணியை, விழிப்புணர்வை ஒவ்வொரு தனி மனிதனும் செய்வதென்பது நமது கடமை தான். திருட்டு குற்றம் என்பது மற்ற அனைத்து குற்றங்களை காட்டிலும் மோசமான நிலைமையை உருவாக்கிட கூடிய குற்றமாகும். இக்குற்றத்தை செய்தவன் மீண்டும் திருட்டுத் தொழில் செய்தே வாழ்க்கையை நடத்துமளவிற்கு சமுதாய சூழலும், அந்த குற்றவாளி மீது திருடன் என்கிற முத்திரையும் ஆழமாக பதிக்கப்படும் அளவிற்கு தள்ளப்படுகிறான். எனவே, இந்நிலையில் திருட்டை தடுக்க, மற்றூம் திருடப்பட்ட பொருளை மீட்கும் வழிகள், திருடினால் ஏற்படும் விளைவுகள் போன்றவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.