எப்போதும் உண்மையே பேசுங்கள்..
நீங்கள் பொய் பேசினால் அந்த பொய்யை நீங்கள் காப்பாற்ற வேண்டும்..
அதேநேரம் நீங்கள் உண்மை பேசினால் அந்த உண்மை உங்களை காப்பாற்றும்..
ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள் சொல்ல வேண்டும்..
ஒரு உண்மையை சொல்ல அப்படி எதுவும் செய்ய வேண்டியதில்லை..
“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்”
இது எல்லோருக்கும் பொருந்தும். தாமதமாக கிடைத்தாலும் தர்மத்திற்கு என்றுமே மதிப்பு உண்டு..
“சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளை” என்பது போல என்ன தான் அதர்மிகள் ஆண்டாலும் அக்கிரமம் செய்பவர்கள் எல்லாவற்றையும் பிடுங்கி கொண்டாலும் ஊழ்வினை என்றொரு விடயம் இருக்கிறது.
அதன் பிரகாரம் வாய்மை தவறியவர்கள் மனிதமற்ற அரக்கர்கள் இயற்கையை சூறையாடுபவர்கள் போன்றவர்கள் நிச்சயம் ஒரு நாள் அழிக்கப்படுவார்கள். வாய்மை வெல்லும் மனிதர்களான நாம் வாய்மையின் வழி வாழ்வோமாக.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners