"விஷ்ணு சஹஸ்ரநாமம்" என்பது, மஹாபாரதத்தின் அநுசாஸன பர்வம், 149ம் அத்தியாயத்தில் பீஷ்மர் மூலம் யுதிஷ்டிரனுக்கு வெளிப்படுத்தப்படும் முக்கிய துதியாகும். இந்த விஷ்ணு சஹஸ்ர நாமத்தை இயற்றியவர் வியாசர் என்று பீஷ்மரே இந்த அத்தியாயத்தின் 141ம் சுலோகத்தில் சொல்கிறார்.
பத்ம புராணம், ஸ்கந்த புராணம், கருட புராணம் ஆகியவற்றிலும் இதன் வெவ்வேறு பதிப்புகள் உள்ளன என்றும், சுந்தர குட்கம் என்ற படைப்பில், இதன் சீக்கிய பதிப்பும் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. சம்ஸ்கிருதத்தில் "ஸஹஸ்ரம்" என்றால், "ஆயிரம்" என்றும், "நாமம்" என்றால், "பெயர்" என்றும் பொருள். எனவே, இந்த நாமாவளியை "விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்" என்றும் பொருள் கொள்ளலாம்.
விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வரும் ஆயிரம் பெயர்களும், கர்மத்தைக் கட்டுப்படுத்தும் தெய்வத்தின் சக்தியையே குறிப்பாகத் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து வரும் பெயர்களும் கூட, ஒரு வாக்கியமாக அமைந்து, பெரும் பொருளை உணர்த்தவல்லவையாக இருக்கின்றன என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners