Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palசெ. அருட்செல்வப்பேரரசன்மொழிபெயர்ப்பாளர் & எழுத்தாளர் 1. 2012 முதல் 2019 வரை முழுமையான "மஹாபாரதம்" தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.2. 2020 முதல் 2022 வரை முழுமையான "ஹரிவம்சம்" தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.3. 2022 முதல் இதுவரை முழுமையான "இராமாயRead More...
செ. அருட்செல்வப்பேரரசன்
மொழிபெயர்ப்பாளர் & எழுத்தாளர்
1. 2012 முதல் 2019 வரை முழுமையான "மஹாபாரதம்" தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
2. 2020 முதல் 2022 வரை முழுமையான "ஹரிவம்சம்" தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
3. 2022 முதல் இதுவரை முழுமையான "இராமாயணம்" தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது.
இந்தத் தொகை நூல்கள் அனைத்தையும் www.arasan.info வலைத்தளத்தில் முழுமையாகப் படிக்கலாம்.
இதைத் தவிர மஹாபாரதத்தில் இருந்து கீழ்க்கண்ட தலைப்புகளில் அச்சுநூல்களும் தமிழில் வெளிவந்திருக்கின்றன.
1. நளதமயந்தி
2. நாகவேள்வி
3. துஷ்யந்தன் சகுந்தலை
4. யயாதி
5. சாந்தனு சத்தியவதி
6. அம்பை – சிகண்டி
இந்நூல்கள் https://www.arasan.info/p/printed-books.html என்ற சுட்டியில் கிடைக்கும்
***
1. The unabridged edition of the Mahabharata was translated into Tamil from 2012 to 2019.
2. The unabridged edition of the Harivamsha was translated into Tamil from 2020 to 2022.
3. The unabridged edition of the Ramayana has been translated into Tamil from 2022 to now.
All these unabridged works can be read in full at www.arasan.info
Other than these, Stories from the Mahabharata were published in the below titles in tamil
1. Nala Damayanti
2. Naagavelvi
3. Dhushyantan Shakuntalai
4. Yayati
5. Shantanu Satyavati
6. Ambai Sikhandi
These books can be bought from https://www.arasan.info/p/printed-books.html
Read Less...
இந்நூலானது, "முழுமஹாபாரதம்" என்ற இந்தத் தொகுப்பின் இரண்டாம் தொகுதி / இரண்டாம் நூலாகும். இத்தொகுப்பில் மஹாபாரதத்தின் முதல் பர்வமான ஆதிபர்வத்தின் 224 முதல் 236ம் பகுதிகள் வரையு
இந்நூலானது, "முழுமஹாபாரதம்" என்ற இந்தத் தொகுப்பின் இரண்டாம் தொகுதி / இரண்டாம் நூலாகும். இத்தொகுப்பில் மஹாபாரதத்தின் முதல் பர்வமான ஆதிபர்வத்தின் 224 முதல் 236ம் பகுதிகள் வரையும், இரண்டாம் பர்வமான சபா பர்வத்தின் 1 முதல் 80ம் பகுதிகள் வரையும், மூன்றாம் பர்வமான வனபர்வம் 1 முதல் 131ம் பகுதிகள் வரையும் இடம்பெறுகின்றன.
மூலத்திற்கு மிக நெருக்கமான ஆங்கில மொழிபெயர்ப்பென அறிஞர்கள் அறுதியிட்டுக் கூறும் கிசாரி மோகன் கங்குலி அவர்களின் படைப்பை மையமாக வைத்துக் கொண்டு, ஆங்கிலத்திலேயே அமைந்த மன்மதநாததத்தர் பதிப்பு, செம்பதிப்பான விவேக்தேவ்ராய் பதிப்பு, தமிழில் கும்பகோணம் பதிப்பு ஆகியவற்றையும், சில இடங்களில் வில்லி பாரதத்தையும் ஒப்பிட்டு, பல்வேறு இடங்களில் பல்வேறு அடிக்குறிப்புகளைக் கொடுத்துச் செய்யப்பட்டதே இந்த "முழுமஹாபாரதம்" ஆகும்.
இந்நூலானது, "முழுமஹாபாரதம்" என்ற இந்தத் தொகுப்பின் இரண்டாம் தொகுதி / இரண்டாம் நூலாகும். இத்தொகுப்பில் மஹாபாரதத்தின் முதல் பர்வமான ஆதிபர்வத்தின் 224 முதல் 236ம் பகுதிகள் வரையு
இந்நூலானது, "முழுமஹாபாரதம்" என்ற இந்தத் தொகுப்பின் இரண்டாம் தொகுதி / இரண்டாம் நூலாகும். இத்தொகுப்பில் மஹாபாரதத்தின் முதல் பர்வமான ஆதிபர்வத்தின் 224 முதல் 236ம் பகுதிகள் வரையும், இரண்டாம் பர்வமான சபா பர்வத்தின் 1 முதல் 80ம் பகுதிகள் வரையும், மூன்றாம் பர்வமான வனபர்வம் 1 முதல் 131ம் பகுதிகள் வரையும் இடம்பெறுகின்றன.
மூலத்திற்கு மிக நெருக்கமான ஆங்கில மொழிபெயர்ப்பென அறிஞர்கள் அறுதியிட்டுக் கூறும் கிசாரி மோகன் கங்குலி அவர்களின் படைப்பை மையமாக வைத்துக் கொண்டு, ஆங்கிலத்திலேயே அமைந்த மன்மதநாததத்தர் பதிப்பு, செம்பதிப்பான விவேக்தேவ்ராய் பதிப்பு, தமிழில் கும்பகோணம் பதிப்பு ஆகியவற்றையும், சில இடங்களில் வில்லி பாரதத்தையும் ஒப்பிட்டு, பல்வேறு இடங்களில் பல்வேறு அடிக்குறிப்புகளைக் கொடுத்துச் செய்யப்பட்டதே இந்த "முழுமஹாபாரதம்" ஆகும்.
இந்நூலானது, "முழுமஹாபாரதம்" என்ற இந்தத் தொகுப்பின் முதல் தொகுதி / முதல் நூலாகும். இத்தொகுப்பில் மஹாபாரதத்தின் முதல் பர்வமான ஆதிபர்வத்தில் 1 முதல் 223ம் பகுதிகள் வரை இடம்பெறுக
இந்நூலானது, "முழுமஹாபாரதம்" என்ற இந்தத் தொகுப்பின் முதல் தொகுதி / முதல் நூலாகும். இத்தொகுப்பில் மஹாபாரதத்தின் முதல் பர்வமான ஆதிபர்வத்தில் 1 முதல் 223ம் பகுதிகள் வரை இடம்பெறுகின்றன. ஆதிபர்வம் 236 பகுதிகளைக்கொண்டதாகும். இதில் எஞ்சிய 13 பகுதிகளும் அடுத்த தொகுதியில் இடம்பெறும்.
மஹாபாரதம் ஐந்தாம் வேதம் என்று சொல்லப்படுகிறது. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் செல்யூகஸ் நிகேடரால், சந்திரகுப்த மௌரியனின் அவைக்கு அனுப்பப்பட்ட கிரேக்க பயணி மெகஸ்தனீஸ் மகாபாரதப் பாத்திரமான கிருஷ்ணனைக் குறித்துச் சொல்கிறார். தமிழில் சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து 14:5-7, சிறுபாணாற்றுப்படை 238-241, கலித்தொகை 25, 52, 101, 104, 108 ஆகியவற்றில் மஹாபாரதத்தைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. நளவெண்பா, அல்லி அரசாணி மாலை போன்றவை மஹாபாரதத்தின் துணைக்கதைகளே. வடக்கே கிடைக்கும் சாகுந்தலம் மற்றும் யயாதி போன்றவையும் அவ்வாறே. மஹாபாரதத்தின் மிகப் பழமையான உரை கி.மு.400 காலக்கட்டத்தைச் சார்ந்தது. குப்தர்கள் காலத்தில்தான் அந்தப் பதிப்பு நிறைவை எட்டியிருக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. ஒன்றுசேர்ந்த இலியட் மற்றும் ஒடிசியின் அளவைவிட மஹாபாரதம் பத்து மடங்கு பெரியது. அளவிலும், பொருளிலும் உலகத்தில் பெரிய இலக்கிய படைப்பு மகாபாரதமே.
மூலத்திற்கு மிக நெருக்கமான ஆங்கில மொழிபெயர்ப்பென அறிஞர்கள் அறுதியிட்டுக் கூறும் கிசாரி மோகன் கங்குலி அவர்களின் படைப்பை மையமாக வைத்துக் கொண்டு, ஆங்கிலத்திலேயே அமைந்த மன்மதநாததத்தர் பதிப்பு, செம்பதிப்பான விவேக்தேவ்ராய் பதிப்பு, தமிழில் கும்பகோணம் பதிப்பு ஆகியவற்றை ஒப்புநோக்கி, பல்வேறு இடங்களில் பல்வேறு அடிக்குறிப்புகளைக் கொடுத்துச் செய்யப்பட்டதே இந்த "முழுமஹாபாரதம்" ஆகும்.
இந்நூலானது, "முழுமஹாபாரதம்" என்ற இந்தத் தொகுப்பின் முதல் தொகுதி / முதல் நூலாகும். இத்தொகுப்பில் மஹாபாரதத்தின் முதல் பர்வமான ஆதிபர்வத்தில் 1 முதல் 223ம் பகுதிகள் வரை இடம்பெறுக
இந்நூலானது, "முழுமஹாபாரதம்" என்ற இந்தத் தொகுப்பின் முதல் தொகுதி / முதல் நூலாகும். இத்தொகுப்பில் மஹாபாரதத்தின் முதல் பர்வமான ஆதிபர்வத்தில் 1 முதல் 223ம் பகுதிகள் வரை இடம்பெறுகின்றன. ஆதிபர்வம் 236 பகுதிகளைக்கொண்டதாகும். இதில் எஞ்சிய 13 பகுதிகளும் அடுத்த தொகுதியில் இடம்பெறும்.
மஹாபாரதம் ஐந்தாம் வேதம் என்று சொல்லப்படுகிறது. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் செல்யூகஸ் நிகேடரால், சந்திரகுப்த மௌரியனின் அவைக்கு அனுப்பப்பட்ட கிரேக்க பயணி மெகஸ்தனீஸ் மகாபாரதப் பாத்திரமான கிருஷ்ணனைக் குறித்துச் சொல்கிறார். தமிழில் சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து 14:5-7, சிறுபாணாற்றுப்படை 238-241, கலித்தொகை 25, 52, 101, 104, 108 ஆகியவற்றில் மஹாபாரதத்தைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. நளவெண்பா, அல்லி அரசாணி மாலை போன்றவை மஹாபாரதத்தின் துணைக்கதைகளே. வடக்கே கிடைக்கும் சாகுந்தலம் மற்றும் யயாதி போன்றவையும் அவ்வாறே. மஹாபாரதத்தின் மிகப் பழமையான உரை கி.மு.400 காலக்கட்டத்தைச் சார்ந்தது. குப்தர்கள் காலத்தில்தான் அந்தப் பதிப்பு நிறைவை எட்டியிருக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. ஒன்றுசேர்ந்த இலியட் மற்றும் ஒடிசியின் அளவைவிட மஹாபாரதம் பத்து மடங்கு பெரியது. அளவிலும், பொருளிலும் உலகத்தில் பெரிய இலக்கிய படைப்பு மகாபாரதமே.
மூலத்திற்கு மிக நெருக்கமான ஆங்கில மொழிபெயர்ப்பென அறிஞர்கள் அறுதியிட்டுக் கூறும் கிசாரி மோகன் கங்குலி அவர்களின் படைப்பை மையமாக வைத்துக் கொண்டு, ஆங்கிலத்திலேயே அமைந்த மன்மதநாததத்தர் பதிப்பு, செம்பதிப்பான விவேக்தேவ்ராய் பதிப்பு, தமிழில் கும்பகோணம் பதிப்பு ஆகியவற்றை ஒப்புநோக்கி, பல்வேறு இடங்களில் பல்வேறு அடிக்குறிப்புகளைக் கொடுத்துச் செய்யப்பட்டதே இந்த "முழுமஹாபாரதம்" ஆகும்.
"விஷ்ணு சஹஸ்ரநாமம்" என்பது, மஹாபாரதத்தின் அநுசாஸன பர்வம், 149ம் அத்தியாயத்தில் பீஷ்மர் மூலம் யுதிஷ்டிரனுக்கு வெளிப்படுத்தப்படும் முக்கிய துதியாகும். இந்த விஷ்ணு சஹஸ்ர நாமத
"விஷ்ணு சஹஸ்ரநாமம்" என்பது, மஹாபாரதத்தின் அநுசாஸன பர்வம், 149ம் அத்தியாயத்தில் பீஷ்மர் மூலம் யுதிஷ்டிரனுக்கு வெளிப்படுத்தப்படும் முக்கிய துதியாகும். இந்த விஷ்ணு சஹஸ்ர நாமத்தை இயற்றியவர் வியாசர் என்று பீஷ்மரே இந்த அத்தியாயத்தின் 141ம் சுலோகத்தில் சொல்கிறார்.
பத்ம புராணம், ஸ்கந்த புராணம், கருட புராணம் ஆகியவற்றிலும் இதன் வெவ்வேறு பதிப்புகள் உள்ளன என்றும், சுந்தர குட்கம் என்ற படைப்பில், இதன் சீக்கிய பதிப்பும் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. சம்ஸ்கிருதத்தில் "ஸஹஸ்ரம்" என்றால், "ஆயிரம்" என்றும், "நாமம்" என்றால், "பெயர்" என்றும் பொருள். எனவே, இந்த நாமாவளியை "விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்" என்றும் பொருள் கொள்ளலாம்.
விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வரும் ஆயிரம் பெயர்களும், கர்மத்தைக் கட்டுப்படுத்தும் தெய்வத்தின் சக்தியையே குறிப்பாகத் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து வரும் பெயர்களும் கூட, ஒரு வாக்கியமாக அமைந்து, பெரும் பொருளை உணர்த்தவல்லவையாக இருக்கின்றன என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.