Share this book with your friends

Jannal Seethaigal / ஜன்னல் சீதைகள் மாதங்களில் அவள் மார்கழி / Maadhangalil Aval Maargazhi

Author Name: Rajeshkumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

மும்பை பத்திரிக்கையொன்றில் ஜர்னலிஸ்ட்டாக   பணியாற்றும் சில்பா, நெடுநாட்களுக்கு பிறகு சென்னையில் கணவன், குழந்தை என வசிக்கும் தோழி யாமினியைக் காண அவளுக்கே தெரியப்படுத்தாமல் அவள் வீட்டிற்கு வருகிறாள். அவளைப் பார்த்ததும் சில்பா அதிர்ச்சியடைந்து உறைந்துபோகிறாள்.அந்த அதிர்ச்சிக்கு  காரணம் என்ன? கண்முன்னே சிதறி கிடக்கும் கேள்விகளுக்கு விடை தேடுகிறாள்? கிடைத்ததா?  அதற்கு சில்பா என்ன செய்யப் போகிறாள்? 

இது ஒரு வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்ட திருமணம் ஆன ஆண் - பெண்  உளவியல் சார்ந்த கதை.

மாதங்களில் அவள் மார்கழி !

வாணி, நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த ஒரு அழகான பெண் பாடகி. தருண் ஒரு பணக்கார தொழிலதிபரின் மகன். ஒரு மேடை கச்சேரியில் பாடும் வாணியைப் பார்த்தவுடன்  ஒரு தலை காதல் கொள்கிறான் தருண். வாணியைத் திருமணம் செய்ய தருண் பல தடைகளை மீறி முயற்சிக்கிறான். அதே சமயம் வாணிக்கு திரைத்துறையில் பாடும் வாய்ப்பு வருகிறது.

இக்கட்டான சூழலில் வாணிக்கு  எதிர்பாரா திரைத்துறை  வாய்ப்பால் சொந்த வாழ்வில் சில பிரச்சனைகள் உருவாகின்றன. அதை சமாளிக்க சில யுக்திகளை கையாளுகிறாள்,ஒரு சிறு சாவி மூலம் பெருங்கதவை திறப்பது போல. அவை பலன் தந்ததா?  தருண் தன் காதலை சொல்லும் முயற்சியில் வெற்றி பெற்றனா? வாணி தன் திரைத்துறையில் வந்த பிரச்சனையை எப்படி எதிர்க் கொள்கிறாள்? 

இது ஒரு  வெளிப்படையான, தெளிவான, தைரியமிக்க  ஆனால் தன்னலமற்ற பெண்ணின் கதை.

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜேஷ்குமார்

ராஜேஷ்குமார், 1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி கோவை மாநகரில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ராஜகோபால். பின்னர் எழுத்துக்காக ராஜேஷ்குமார் எனும் புனைப்பெயர் கொண்டார். இதுவரை 1500 நாவல்கள் 2000 சிறுகதைகள் எழுதியுள்ளார். இவற்றைத்தவிர நூற்றுக்கணக்காண அறிவியல்,ஆன்மிக மற்றும் வாழ்வியல்  கட்டுரைகள் படைத்துள்ளார். அவற்றில் “ஸார் ஒரு சந்தேகம்!” , “வாவ் ! ஐந்தறிவு”, “சித்தர்களா! பித்தர்களா!!”  முக்கியமானவை.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தன் தந்தை செய்த கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்,  அதை கவனித்தபடியே கதைகள் எழுதினார்.இவரின்  முதல் சிறுகதை 1969ம் வருடம் மாலை முரசு கோவை பதிப்பில் வெளிவந்தது. 1980வது வருடம் இவருடைய முதல் நாவல் மாலைமதி மாத இதழில் வெளிவந்தது. நாவலின் தலைப்பு வாடகைக்கு ஓர் உயிர். அதே 1980வது வருடம் கல்கண்டு வார இதழில் ஏழாவது டெஸ்ட் ட்யூப் என்ற  முதல் தொடர்கதை வெளியானது.

1980லிருந்து 1995 வரை தமிழ்நாட்டில்  41 மாத நாவல்கள் வெளிவந்தன. அனைத்திலும் ராஜேஷ்குமார் தொடர்ந்து எழுதியதின் விளைவு 1998ம் ஆண்டே 1000மாவது நாவலைத் தொட்டுவிட்டார்.

 இவரது  எழுத்து படிக்க எளிமையாகவும், படித்தவுடனேயே புரிந்து கொள்ளும்படியாக இருப்பதால் பாமர வாசகர்களும் படிக்கிறார்கள். அதேபோல் பல்துறை வல்லுனர்களும் படிக்கிறார்கள் வாசிக்கிறார்கள்.

சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நாவல்களை  பல பல்கலைக்கழக மாணவர்கள் பி.எச்டி. படிப்பில் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு டாக்டர் பட்டம் பெற்று இருப்பது சிறப்பு.

இவருடைய  நாவல்கள் பல திரைப்படங்களாகவும்  தொலைக்காட்சித்   தொடர்களாகவும்  தயாரிக்கப்பட்டுள்ளன. இவரது படைப்புக்கள் அச்சுப்புத்தகங்களாக மட்டுமின்றி  மின்புத்தகங்களாகவும் ஒலிப்புத்தகங்களாகவும் அடுத்த தலைமுறைக்கு கிடைக்கின்றன. எழுத்துலகில் இவர் ஆற்றிய  சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்துள்ளது. இவர்க்கு தமிழக அரசு, 2010ல் கலைமாமணி விருது வழங்கி சிறப்பு செய்துள்ளது.

Read More...

Achievements

+7 more
View All