Share this book with your friends

KANINTHA MANAM / கனிந்த மனம் பாகம் 1

Author Name: Nandhini Sugumaran | Format: Paperback | Genre : Others | Other Details

தான் இருக்கும் கிராமத்தின் மனிதர்களையே, தன் குடும்பமாக உறவுகளாக நினைத்து வாழும் நாயகி. குடும்ப உறவுகளில் பெரிதாக நம்பிக்கை இல்லாமல் இருக்கும் அமெரிக்க குடிமகனான நாயகன், தமையனின் திருமணத்திற்காக இந்தியா வருகிறான்.

தன் தங்கையை போன்ற பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்து, அவளுக்கு ஒரு நல்வாழ்வை ஏற்படுத்தித்தர முயற்சி செய்யும் நாயகியை எதிர்பாராதவிதமாக சந்திக்கிறான் நாயகன். 

பெண்மையின் ஆளுமை பிடித்துப்போக இருவருக்குமிடையே ஒரு புரிதல் உருவாகிறது.  இந்தப் புரிதலின் அடுத்த கட்டம் என்ன? நாயகனுக்கு குடும்ப உறவுகளில் நம்பிக்கை வந்ததா? நாயகி அவனுக்கு அதை உணர்த்தினாளா? வெவ்வேறான எண்ணங்கள் கொண்ட இருவர் வாழ்வில் ஒன்றிணையும் போது, அவர்களின் வாழ்க்கை முறை எப்படி மாறுகிறது? 

பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலை என்ன? நாயகியின் முயற்சி கைகூடியதா?  அந்த பெண்ணிற்கான வாழ்வு கிடைத்ததா? கிராமத்து மனிதர்களின் எண்ணங்களும் நிலைபாடும் எப்படி மாறுகிறது? இரு பெண்களும் அதை எப்படி எதிர்கொள்கின்றனர் என கதையில் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இக்கதையில் முதன் முறையாக கிராமத்து பேச்சு வழக்கை முயன்றுள்ளேன், தங்களது கருத்தை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.

Read More...
Paperback
Paperback 750

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நந்தினி சுகுமாரன் (2021)

வணக்கம் தோழமைகளே..

    நான் நந்தினி, இல்லத்தரசி. நேரம் கடத்துவதற்காக கதைகளை வாசிக்க துவங்கி, அதில் ஆர்வம் ஏற்பட்டது. பின் அதுவே என் முழுநேர சுவாசமாகி போனது. பல எழுத்தாளர்களின் கதைகளை தேடி தேடி படித்து, தமிழையும் அதன் சுவையையும் உணர்ந்து கொண்டேன். வாசித்த கதைகளின் தாக்கத்தால் எனக்குள்ளும் கற்பனைகள் வளர துவங்கின. அதை வெளிப்படுத்தும் வழியறியாது ஆண்டுகள் கடந்து விட, தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது கற்பனை உருவங்களுக்கு, பெயர் அடையாளம் உணர்வுகள் கொடுத்து.. கதையின் மூலமாம் நடமாட விட்டுள்ளேன். உங்களுக்கும் இந்த நிழல் உருவங்கள் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

என்றும் உங்கள்..

நந்தினி சுகுமாரன்.

Read More...

Achievements

+6 more
View All