Share this book with your friends

Meezh Kanave / மீள் கனவே

Author Name: Selvadeepa | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

என்னுடைய இந்த நாவலான "மீள் கனவே" மூலம் உங்களை முதன் முறையாக சந்திக்கிறேன். இக்கதையில் எட்டு ஜோடிகள் இடம் பெற்றுள்ளனர். இக்கதையின் முதல் நாயகி தன் ஆருயிர் கணவனையும், குழந்தையையும் காப்பாற்ற சந்திக்கும் இன்னல்களும், அவளுக்கு கிடைத்த இரண்டாவது நாயகியின் உண்மையான நட்பும், அவளது உதவும் சுபாவமும் நம்மை பிரம்மிக்க வைக்கும் அளவுக்கு உள்ளது.

முதல் நாயகிக்கு ஏற்பட்ட துரோகமும்,தன் குடும்பத்தை அவள் காப்பாற்றி அவர்களுடன் சேர்வாளா? இரண்டாவது நாயகியை ஏமாற்றிய காதலனும், அவளின் பிரச்சனையை போக்க வந்த அன்புள்ளம் கொண்ட இரண்டாவது நாயகனின் கரத்தினை பிடிப்பாரா?

மற்ற நாயகிகளும் தன் பிரச்சனையை சரி செய்து, நாயகன்களுடன் இணைவார்களா?படித்து பாருங்கள். உங்களுக்கு எந்த ஜோடியை பிடித்திருக்கிறது? எந்த நாயகன், நாயகியின் குணாதீசங்கள் உங்களுக்கு பிடித்திருக்கிறது என்று உங்களது கருத்துகளை கூறுங்கள்.  

 

Read More...
Paperback
Paperback 449

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

செல்வதீபா

செல்வதீபா

பள்ளிப் பருவத்திலிருந்தே நாவல் வாசிப்பதில் அதீத ஆர்வமுடையவர்.ரமணிச்சந்திரன், ராஜேஷ் குமார் நாவல் மீது பற்றுடையவர். தன்னை சுற்றி நடக்கும் பிரச்சனையை வைத்து கற்பனையாக்கி இந்த நாவலை படைத்துள்ளார்.பெண்களின் அன்றாட நிகழ்வுகள், பிரச்சனைகளை நம் கண் முன் இந்த நாவலில் எடுத்துரைத்துள்ளார்.இது தான் அவரது முதல் படைப்பு.

திருமணத்திற்கு முன் மூன்று ஆண்டுகள் பள்ளி ஆசிரியையாக பணியாற்றியவர்.கற்பனையாக நினைத்த அனைத்து நிகழ்வுகளையும் நாவலாக தயாரிக்க உள்ளார்.கடலுக்குள் மூழ்கி முத்தெடுப்பது போல்,கற்பனைக்குள் மூழ்கி அழகான காதல்,நட்பு,அனைத்து உறவுகளை பற்றியும், அதனோடு எதிர்பாராத கதை திருப்பம் அனைத்தையும் கொடுத்து உங்களை மகிழ்விப்பார். 

 

Read More...

Achievements