Share this book with your friends

VALARPU MAGAL (Novel) / வளர்ப்பு மகள் நாவல்

Author Name: Su. Samudram | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இந்த இரண்டு நாவல்களும் நோக்கிலும், போக்கிலும், நடையிலும் வித்தியாசமானவை. சந்திராவை நேர்கோட்டில் நடக்க வைத்தேன். அவளைப் பாலியல் பிரச்சனைகளுக்கு உட்படுத்த வில்லை. அப்படியே உட்படுத்தி இருந்தாலும் இந்திரமயத்தில் வரும் அளவிற்கான பிரச்சினைகளை அந்தக் காலக்கட்டத்தில் அவள் உள்வாங்கியிருக்கத் தேவையில்லை. கூட்டுக் குடும்ப வாழ்க்கையும், பலதரப்பு நட்பும் அவளையோ அவளுக்கு வருகின்ற கணவனையோ பாலியல் சிக்கல்களில் அதிகமாக உட்படுத்தியிருக்காது. ஆனால், இந்திரமயத்தில் வரும் சந்திரா, ஒரு வகையில் சந்திராவின் காலப் பரிணாமம். இன்னொரு வகையில் இன்றைய ஆடியோ, வீடியோ வர்த்தகக் கலாச்சாரச் சூழலின் தாக்கங்களாலும், வேரற்றக் குடும்பச் சூழலாலும் பாதிக்கப்படும் பெண் இனத்தின் பிரதிநிதி.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

சு. சமுத்திரம்

சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். அவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன அவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் ஒரு சோஷியலிசவாதி. அவரது படைப்புகளில் சோஷியலிசக் கருத்துக்கள் பரவியிருந்தது. அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக்களமாக அமைந்தன. 1990ல் அவரது புதினம் வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது பெற்றது. 2003ல் சென்னையில் அவர் ஒரு விபத்தில் காலமானார்

Read More...

Achievements

+16 more
View All