Share this book with your friends

VILAIKKU ORU VANAVIL - GANGAI INGAE THIRUMBUGIRATHU (2 NOVELS COMBO) / விலைக்கு ஒரு வானவில் - கங்கை இங்கே திரும்புகிறது இரண்டு நாவல்கள்/2 Novels

Author Name: RajeshKumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

விலைக்கு ஒரு வானவில்

மிதிலா, டிவி சேனல் ஒன்றில் பணியாற்றும் ஒரு மிக துணிச்சலான மற்றும் நேர்மையான பெண்.

அவள் ஒரு நிகழ்ச்சி தயாரிப்புக்காக தன் குழுவினருடன் பெங்களூருக்கு செல்கிறாள்.

அந்த பயணமும் அந்த நிகழ்ச்சிக்கான கருப்பொருளும் மிதிலாவின் வாழ்க்கையின் போக்கையே மாற்றும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டாள். 

போகும் இடத்தில் எதிர்பாராத நட்பு.அதனால், வரும் அடுக்கடுக்கான அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், சூழ்ச்சிகள் அவளை நிலைகுலைய வைக்கின்றன. இருந்தாலும்... தைரியமாக எதிர்த்து நிற்கிறாள்... போராடுகிறாள். ஆனால்,வெற்றி பெறுகிறாளா?

இந்த கதை படிக்கும் உங்களுக்கு மிதிலா கதாபாத்திரத்தின் எதையும் தட்டிக் கேட்கும் துணிச்சல் கொஞ்சமாவது ஒட்டிக்கொள்வது நிச்சயம். 

 

கங்கை இங்கே திரும்புகிறது 

ஒரு ரயில் பயணத்தில் நிவேதனும் ஹமீதும் பரிச்சயம் ஆகிறார்கள். அதே வேகத்தில் ஒரு அற்ப விஷயத்தில் எதிரும் புதிருமாக மாறுகிறார்கள்.

பயணம் நீளும் போது,ஒரு எதிர்பாராத சம்பவம்...

பயணிப்பவர்கள் அனைவரையும் உலுக்கி எடுக்கிறது. கண்டிப்பாக உங்களையும் உலுக்கி எடுக்கும்.

அங்கிருந்து கதை வேறு திசையில் பயணிக்கிறது.

அதன்பின் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் இளகிய இதயமுள்ளவர்களின்

மனதை நெகிழவும் வைக்கும், கண்ணீர் கசியவும் வைக்கும். 

வாழ்க்கையில்,

சில கேள்விகளுக்கு பதில் என்றுமே கிடைக்காது.

அதுபோன்ற கேள்விகளை இந்த கதையில் எதிர்ப்பார்க்கலாம். விடை கிடைக்குமா...என்றால் வாய்ப்பிருக்கிறது என்றே சொல்லலாம்.

ஒன்றுமட்டும் நிச்சயம் இதில் வரும் நிவேதனையும் ஹமீதையும்

நீங்கள்

மறக்க வெகுநாளாகும்.

Read More...
Paperback
Paperback 230

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜேஷ்குமார்

ஆர்.கே. என்னும் இந்த இரண்டு எழுத்துக்களுக்குள் அடங்கியிருக்கும் ராஜேஷ்குமார் என்னும் எழுத்தாளர் 1969ம் ஆண்டு தன்னுடைய 21 வயதில் எழுத ஆரம்பித்து 2019ல் தன்னுடைய எழுத்துலக வாசத்தின் 50வது ஆண்டாய் முடித்துக் கொண்டு இன்னமும் எழுதிக்கொண்டு இருப்பவர்.

1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பிறந்த இவர்க்கு பெற்றோர் இட்ட பெயர் ராஜகோபால். தாத்தாவின் பெயரான குப்புசாமியையும், அப்பாவின் பெயரான ரங்கசாமியையும் தன்னுடைய பெயரோடு இணைத்துக்கொண்டதின் காரணமாய் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சக மாணவர்களால் கே.ஆர்  என்று அழைக்கப்பட்டவர்.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவுடன் இணைந்து கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  அதை கவனித்தபடியே கதைகள் எழுதியவர். 1973 முதல் 1980 வரை தன்னுடைய வியாபார விஷயமாக மாதம் ஒரு முறை இந்தியாவின் வடமாநில நகர்களுக்கு சென்று வந்ததின் விளைவாகவும் பலதரப்பட்ட மக்களையும், நிகழ்வுகளையும் சந்தித்ததின் பயனாகவும் பல கதைகள் அவர் மனதிலே உருவாகி சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்தது.

Read More...

Achievements

+7 more
View All