அன்று வாழ்க்கை முறையை வகுத்த வள்ளுவர் இயற்றிய திருக்குறளில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் இன்றும் பயன்படுவதை மறுக்க முடியாது.ஆனால் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக இன்று வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களை மனத்திற் கொண்டு இந்நூலை இயற்றியிருக்கின்றேன் சிறப்பாக வள்ளுவர் காலத்தில் முடியாட்சி இருந்தது. அதனால் அவர் அதுபற்றி விரிவாகப் பேசினார். இன்றோ குடியாட்சி மலர்ந்திருக்கிறது. எனவே அதுபற்றிப் பேசுவது அவசியமாகிறது.
நம் தாய்மொழியில் எழுதப்படிக்கத் தெரிந்த எவரும் இக்குறட்பாக்களைப் படித்துப் பொருள் உணர்ந்திடும் வகையில் முடிந்தவரை கவிதைக்கு அழகு தரும் அணிகளை விலக்கியும் புணர்ச்சி விதிகளைத் தளர்த்தியும், எளிய சொற்களைப் பயன்படுத்தியும் இயற்றியிருக்கிறேன், புலவர் பெருமக்கள் குறை பொறுத்து நிறைமனத்துடன் இதனை ஏற்று பலரும்படித்துப் பயன்பெறத் துணை நிற்க வேண்டுகிறேன். முகவை, ஞா குழந்தைசாமி அலைபேசி எண்-09933271931