Share this book with your friends

Anbudan Kathalan / அன்புடன் காதலன் சில காதல்கள் சில கண்ணீர்த்துளிகள்

Author Name: KARTHIK MANI | Format: Paperback | Genre : Poetry | Other Details

காதல் மகத்துவமானது; நம்மில் அது உண்டாக்கும் கதிரியக்க விளைவுகள் கணக்கில் அடங்காதவை. சிலரை அதனால் கவிஞர் ஆக்கவும் முடியும், பலரை காவியமாக்கவும் முடியும். 

என்னிலும் பலமுறை இந்த காதல் அடிக்கடி வந்துப் போவதுண்டு. காதல் தானே, வந்து விட்டு போகட்டுமே என்றெண்ணினால் ஒவ்வொரு முறையும் சில கவிதைகளையும் பல கண்ணீர்த்துளிகளையும் பரிசளித்தே அது செல்கிறது. 

கவிதைகளையும் கண்ணீர்த்துளிகளையும் ஒருங்கே என் இதயத்தில் வைத்துக் கொள்ள இடமின்றி கண்ணீர்த்துளிகளை மட்டும் எனக்கானதாய் வைத்துக் கொண்டு கவிதைகளை உங்களுக்காக இங்கு சமர்ப்பிக்கிறேன். 

சிலவற்றை என்னால் கூட கவிதையாய் ஒப்புக் கொள்ள இயலாவிடினும், அழகு தமிழ் அதன் மீது ஒரு சொர்ணப் பூச்சை செய்து கொஞ்சம் அழகாக்கி விடுகிறது. கவிதையாய் இல்லாவிடில் என்ன, அழகு தமிழை கொஞ்சம் ரசித்து விட்டு போவோமே!

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

நா. கார்த்திக் மணி

இக்கதையின் ஆசிரியர் கார்த்திக் மணி பன்முக திறமையாளர். தொழில் ரீதியில் ஒரு மென்பொருள் வல்லுநர். தமிழில் கதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு படைப்புக்களை நமக்காக அளித்திருப்பவர். மட்டுமல்லாது அவர் ஒரு வனஉயிரினப் புகைப்படவியலாளரும் கூட.  கவிதை எழுதுதல், கதை சொல்வது, புகைப்படம் எடுப்பது, இசைக்கருவிகளை வாசிப்பது என பல விஷயங்களில் திறமை கொண்ட அவர் பயணம் செய்வதிலும் ஆராய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். 

Read More...

Achievements