Share this book with your friends

CHRISTIANAGARAM MISSION SARITHTHIRAM / கிறிஸ்தியாநகரம் மிஷன் சரித்திரம்

Author Name: Prof. Rev. D. A. Christadoss B. A. , L. T. , B. D. , M. Th. | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

"பரலோக ராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது .... அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும் வளரும்போது சகல பூண்டுகளிலும் பெரிதாகி ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் " என்றார் இயேசு.

அதன்படி திருநெல்வேலி அத்தியக்ஷாதீன திருச்சபையின் ஆரம்பம் மிகச் சிறியது; அதன் வளர்ச்சியோ மிகப் பெரியது. 1778-ம் ஆண்டில் 14 பேரடங்கிய திருச்சபை 1960-ம் ஆண்டில் 9920 (80 குறைய 1 1/2 லக்ஷம்) கிறிஸ்தவர்களடங்கிய திருச்சபையாக வளர்ந்திருக்கின்றது. இது ஆண்டவரின் செயலே. அவருக்கே சகல கனமும் மகிமையும் உண்டாவதாக.

கிறிஸ்தியாநகர சேகர சபையும் அவ்வாறே வளர்ச்சியடைந்திருக்கின்றது. அற்பமான ஆரம்பத்தை ஆண்டவர் ஆச்சரியமாய் ஆசீர்வதித்திருக்கின்றார். காலாகாலங்களில் உத்தமமாய் உழைக்கக்கூடிய குருக்களையும் மற்றும் ஊழியரையும் ஆண்டவர் ஏற்படுத்தி, சபைகளை ஆதரிக்கின்றார். இச்சரித்திரத்தில் அது நன்கு விளங்கும்.

மறைந்துகிடந்த ஏடுகளையும் இலக்கியங்களையும் தேடி எடுத்து, அவைகளினின்று இச்சரித்திரத்தை உருவாக்கிய ஆக்கியோனுக்கு எம் நன்றி உரித்தாகுக. இச்சரித்திரத்தை வாசிப்பவர்கள், இவ்வாறே தங்கள் சொந்த சேகரசபை சரித்திரங்களும் எழுதப்படவேண்டுமென்ற ஆர்வங்கொள்வார்களென்பது எமது நம்பிக்கை .

கிறிஸ்தியாநகர சேகர திருச்சபையே, நீ என்றும் வளர்க; நீ என்றும் வாழ்க, கனிதரும் விருட்சமாக நீ என்றும் தழைத்தோங்குக!

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

பேராசிரியர் அருள்திரு. தே. அ. கிறிஸ்துதாஸ்

பேராசிரியர் அருள்திரு தே.அ. கிறிஸ்துதாஸ் ஐயர் (1912- 1990) அவர்கள் தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் பிறந்து, வளர்ந்தவர். பள்ளி ஆசிரியர், வேதாகமக் கல்லூரி பேராசிரியர், முதல்வர், அருட்பணியாளர் மற்றும் எழுத்தாளர் என பல துறைகளிலும் ஜொலித்தவர். திருச்சபையின் வரலாறு மற்றும் திருச்சபையின் வெற்றிக்குக் காரணமான தேவ மனிதர்கள் பற்றி நாம் அறிந்து கொள்ள இவர் எழுதிய நூல்கள் ஒரு திறவுகோல் என்றால் அது மிகையாகாது. எளிய மற்றும் வட்டார வழக்கு தமிழில் எவரும் புரிந்து கொள்ளும்படி ஆராய்ச்சி மற்றும் வரலாற்றுப் புத்தகங்களை எழுதுவது இறைவன் இவருக்குக் கொடுத்த வரம். அநேக புத்தகங்களை மட்டுமல்ல, அநேக கிறிஸ்தவ தலைவர்களையும் இவர் தன் திருப்பணி மூலமாக உருவாக்கி இருக்கின்றார்.

பேராசிரியர் அருள்திரு தே.அ. கிறிஸ்துதாஸ் ஐயர் அவர்கள் மறைந்து கிடந்த ஏடுகளையும் இலக்கியங்களையும் தேடி எடுத்து, இச்சரித்திரத்தை பூர்வீக நூல்களை ஆராய்ச்சிசெய்து, பல பெரியோர்களை கண்டுபேசி இச்சரித்திரத்தை பத்து வருடங்களுக்கு மேல் ஆராய்ச்சி செய்து நமது கைகளில் கொடுத்துள்ளார். எளிய மற்றும் வட்டார வழக்கு தமிழில் எவரும் புரிந்து கொள்ளும்படி ஆராய்ச்சி மற்றும் வரலாற்றுப் புத்தகங்களை எழுதுவது இறைவன் இவருக்குக் கொடுத்த வரம். அநேக நூல்களை மட்டுமல்ல, அநேக கிறிஸ்தவ தலைவர்களையும் இவர் தன் திருப்பணி மூலமாக உருவாக்கி இருக்கின்றார்.

Read More...

Achievements

+9 more
View All