சிவகங்கை மாவட்டத்தில் சாலைக்கிராமம் என்னும் ஊரில் என்
பிறப்பு.அழகான கிராமத்து வாழ்க்கை. அப்பா முருகேசன்,அம்மா
சித்ரா, என்னை பெற்றவர்கள், தம்பி -சிம்சோன், தங்கை -ஜெய
பிரியா என்னோடு பிறந்தவர்கள், கணவர் -ரூபன் என்னை
மணந்தவர் கவிதை புத்தகமானதில் பெரும்பங்கு அவரது.
சிறுவயதில் இருந்தே எனக்கு தனிமையும், தனிமையால் புத்தகமும்
நண்பர்களாயின. ஒவ்வொறு கவிதையும் எழுதி முடிக்கும் போது
எதையோ சாதித்தது போல மகிழ்ச்சியும், அமைதியும் என்னை
நிரப்பும் . சிந்தனைகள் எல்லாம் வரிகளாவது அத்தனை எளிதல்ல
என்பதாலோ ? இல்லை வரிகளால் என் வலிகளையும் ,
வழிகளையும் இறக்கி வைக்க முடிந்ததாலோ?தெரியவில்லை !
இதை வாசிக்கும் வாசக நண்பர்கள் யாவருக்கும் என்
சிந்தனைகளையும் என் உணவுகளையும் சேர்க்க முடிந்தால் அதுதான் இந்த முயற்சியின் வெற்றி . கவிஞனின் வெற்றி.
கதைகள், கவிதை புத்தகங்கள் மீது அலாதி பிரியம் எனக்கு .
வாசிக்க வாசிக்க வாசிப்பு ஒரு கால கட்டத்தில் வரிகளானது.
வரிகள் கவிதையானது. கவிதை தொகுப்பானது.
வாழ்க்கை ஒரு அழகான புத்தகம்.
புத்தகங்கள் மீது நான் கொண்ட காதல்.
இன்று நான் ஒரு புத்தகம் எழுத உத்வேகம் தந்தது.
சில நேரம் சாதனைகள் புத்தகங்கள் ஆகின்றன.
சில நேரம் புத்தகங்கள் சாதிக்கின்றன.
இந்த கவிதை புத்தகமும் சாதிக்க உங்கள் அன்பை வேண்டும்.
உங்கள் குருபிரியா