Share this book with your friends

MARAIYAVIRUNTHA MANIKKA KARKAL-PART I / மறையவிருந்த மாணிக்கக் கற்கள் பாகம் 01 Tirunelveli Historical Books

Author Name: Prof. Rev. D. A. Christadoss B. A. , L. T. , B. D. , M. Th. | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

நெல்லைத் திருச்சபையின் முதல் நூற்றாண்டுவரலாற்றில், அச்சபையினர் கொண்டிருந்த உள்நாட்டுச் சுவிசேஷ ஊழிய ஆர்வமும், வெளி உலக சுவிசேஷச் சேவைப்பற்றும் மேலும், பெரிய சபைகள் தோறும் 'சுவிசேஷக் கூட்டங்கள்', 'யாத்திரீகர் சங்கங்கள்', ஒவ்வொரு வட்டாரத்திலம் சுவிசேஷப் பணியாற்றிய 'அஞ்ஞான நேச சங்கங்கள்', பிரசங்கக் கூட்டங்கள்' முதலியவற்றை அமைத்து, 'உள் நாட்டுச் சுவிசேஷவேலை'யைத் தீவிரமாக நடத்தி வந்தனர் என்ற ஆதாரங்கள் ...

சபைகளின் ஆலய அபிமானம், ஆராதனை ஆசரிப்பு. பரிசுத்த வேத அறிவு, சிறுவரின் ஆவிக்குரிய வளர்ச்சி, கிறிஸ்தவ மக்களுக்குள் சிறந்து விளங்கிய விசுவாச உறுதி, பாவத்தின் மேலுள்ள வெறுப்பு, இவை கடந்த நூற்றாண்டில் நம் நெல்லைச் சபையில் சிறந்திலங்கிய கிறிஸ்தவ சீலங்களென்பது மிஷனெரி அறிக்கைகளிலும் நாட்குறிப்புகளிலும், கடிதங்களிலும் காணக்கிடைக்கிறது. தவிரவும், கல்விச் சேவை, சமூகப்பணி, மருத்துவச் சேவை, விவசாய அபிவிர்த்தி, கூட்டுறவுமுறை, பஞ்சநிவாரணம், குடிசைத் தொழில பிவிர்த்தி, கைத்தொழில் முன்னேற்றம், சுகாதார அறிவூட்டம், சாதிப்பேத ஒழிப்பு, அடிமைமுறை ஒழிப்பு, வாழ்க்கைத்தர உயர்வு, நாகரீகத்தில் தேர்ச்சி, இன்னுமிவை போன்ற வாழ்க்கை நலன்களையளித்து வந்ததுடன், முதல் நூறு ஆண்டுகளினிறுதியில் உயர்தரக் கல்விக்கூடங்கள் (Colleges). அங்கவீனர் கலாசாலைகள், தொழிற் கல்விக்கூடங்கள் போன்றனவற்றையும் நெல்லைச் சபை தன் மக்களுக்கும் நாட்டுக்கும் தந்துதவிவிய வரலாற்று நினைவுகள் ... 

ஏராளமான அவ்வரலாறுகளில் ஒரு சிலவற்றை இந்நூலில் காணலாம்

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

பேராசிரியர் தே அ கிறிஸ்துதாஸ்

பேராசிரியர் அருள்திரு தே.அ. கிறிஸ்துதாஸ் ஐயர் (19121990) அவர்கள் தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் பிறந்து, வளர்ந்தவர். பள்ளி ஆசிரியர், வேதாகமக் கல்லூரி பேராசிரியர், முதல்வர், அருட்பணியாளர் மற்றும் எழுத்தாளர் என பல துறைகளிலும் ஜொலித்தவர். திருச்சபையின் வரலாறு மற்றும் திருச்சபையின் வெற்றிக்குக் காரணமான தேவ மனிதர்கள் பற்றி நாம் அறிந்து கொள்ள இவர் எழுதிய நூல்கள் ஒரு திறவுகோல் என்றால் அது மிகையாகாது. எளிய மற்றும் வட்டார வழக்கு தமிழில் எவரும் புரிந்து கொள்ளும்படி ஆராய்ச்சி மற்றும் வரலாற்றுப் புத்தகங்களை எழுதுவது இறைவன் இவருக்குக் கொடுத்த வரம். அநேக புத்தகங்களை மட்டுமல்ல, அநேக கிறிஸ்தவ தலைவர்களையும் இவர் தன் திருப்பணி மூலமாக உருவாக்கி இருக்கின்றார்.

பேராசிரியர் அருள்திரு தே.அ. கிறிஸ்துதாஸ் ஐயர் அவர்கள் திருநெல்வேலி திருச்சபை வரலாறு மற்றும் திருச்சபையில் தடம் பதித்த மகத்தான தேவ மனிதர்கள் பற்றி ஏராளமான நூல்கள் எழுதி இருக்கிறார். இப்புத்தகங்கள் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளச் செய்வதுடன், நாமும் திருச்சபைக்கு நம் பங்காக என்ன செய்ய முடியும் என்ற சவாலை முன்வைப்பதாக இருக்கின்றன. “மறையவிருந்த மாணிக்கக் கற்கள்” என்னும் இந்நூல் மணலுக்குள் புதைந்து கிடக்கும் மாணிக்கக் கற்களைப் பொறுக்கி எடுத்து அணிகலமாகச் செய்தாற்போல், ஆங்காங்கு தெறியும், மறைந்தும் கிடந்த சரித்திரங்களைக் கண்டெடுத்து, சிறந்ததொரு ஆபரணமாகச் செய்து கொடுத்திருக்கின்றார். அவரால் இயற்றப்பட்டுள்ள இந்நூலே அச்சிறந்த அணிகலமாகும். இதனைப் பலர் பெற்று இதன் மூலமாகப் பயனடைவார்களென்பது கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கத்தின் நோக்கம்.

இந்நூல் இக்காலத்திற்கும் பொருத்தமானதாகவும் நம் முன் ஒரு சவாலையும் வைக்கிறது.

Read More...

Achievements

+9 more
View All