இந்த "முத்துப்பேச்சி" என்ற புத்தகமானது ஒரு சிறந்த புத்தகம் அல்லது மட்டமான புத்தகம் என்று சொல்லிவிட முடியாது. இதனை எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதில் சில சிக்கல்கள் உள்ளன. இதனை எழுதிய ஆசிரியர் என்ற முறையில் நான் எனது வாசகர்களுக்கு சொல்வது என்னவென்றால், இந்த புத்தகத்தை நீங்கள் படிக்கும்போது நாம் எதை நோக்கி பயணம் செய்கிறோம் என்பது சற்றும் புலப்படாமல் இருக்கும். திடீர் திடீரென்று சில திருப்பங்கள் ஏற்படும். சில இடங்களில் புரிதல் மிகவும் குறைவாக இருக்கும். பொதுவாக இது ஒரு கடற்பயணம் போல தோன்றும். மொத்தத்தில் இது எந்த ஒரு துறையிலும் உள்ளே செல்லாமல் எந்த ஒரு துறையை விட்டு வெளியே செல்லாமல் அனைத்து துறைகளையும் பட்டும் படாமலும் பயணிக்கும். வாழ்க! எமது தலைவன் டெரிடா.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners