சிவாஜியின் தந்தை ஷாஹாஜி முதல், சிவாஜியின் இளைய மகன் ராஜாராம் வரை, மூன்று தலைமுறைகளுக்கும், தமிழ்நாட்டுடன் தொடர்பு உண்டு. 1648-ல் முஸ்தபா கானின் தலைமையில் பீஜப்பூர் அரசின் மகத்தான படை, செஞ்சியைப் பிடிக்க வந்தபோது, சிவாஜியின் தந்தை ஷாஹாஜியும், தன்னுடைய படையுடன் அவர்களோடு செஞ்சிக்கு வந்தார். முஸ்தபா கானுடன் எற்பட்ட முரண்பாடு காரணமாக ஷாஹாஜி சிறை பிடிக்கப்பட்டார். 1648 ஜூலை 25 முதல், டிசம்பர் 16 வரை ஷாஹாஜி செஞ்சியில் சிறை வைக்கப்பட்டிருந்தார். சிவாஜி, சம்பாஜி ஆட்சிகளுக்குப் பிறகு, ஔரங்கசீப், மராட்டியர்களின் எல்லா கோட்டைகளையும் பிடித்துக்கொண்டதால், சிவாஜியின் இளைய மகன் ராஜாராமுக்கு எஞ்சியது தமிழ்நாட்டின் செஞ்சி கோட்டை மட்டுமே. செஞ்சியே, ராஜராமுக்கும், அவரது அரசவைக்கும் அடைக்கலத்தை தந்தது எனலாம். ராஜாராம், 1689 நவம்பர் முதல் 1698 மார்ச் வரை எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, செஞ்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ் நாட்டின் ஒரு பகுதியை ஆட்சி செய்தார்.
இந்நூலில், 1677-ல் நடந்த சிவாஜியின் தமிழக படையெடுப்பைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners