நாம் வாழும் இந்த உலகம் நம்பமுடியாத பல அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்தது. இந்த மர்மங்களைத் நாம் தேடிச்சென்றால் முடிவிலா ஒரு பயணத்தில் மாட்டிக் கொள்வோம். மர்மங்கள் மீது அனைவருக்குமே ஒரு இனம் புரியாத ஆர்வம் இருக்கும். அறிவியல் அறிஞர்களாலும் விடை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு விடைதெரியாத சில விசித்திரமான நிகழ்வுகளும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. வசந்த காலத்தில் வந்து குரலில் தேனைத் தூவும் குயில் குளிர் காலத்தில் எங்கே போகிறது என்பது கூட மனித அறிவுக்கு எட்டாத புதிர் தான். இது போல அறிவுக்கு எட்டாத எத்தனை எத்தனையோ புதிர்கள் இந்த புவிக் கோளத்தில் இன்னும் புன்முறுவல் பூத்துக் கொண்டிருக்கின்றன.